Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டை ஆளும் தார்மீக உரிமை கிடையாது | அநுரகுமார

August 12, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

பாராளுமன்றத்தின் ஊடாக தற்போது உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையோ, தார்மீக உரிமையோ கிடையாது. எனவே விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையே தாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதிருப்பது மக்கள் ஆணையற்ற , அவர்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ள ரணில் – ராஜபக்ஷ ஆட்சியாகும். அந்த அரசாங்கத்தின் பங்குதாரர்களாகுமாறு எமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பினை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர் , நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய யதார்த்தமான வேலைத்திட்டத்தை முன்வைத்தால் சாதகமான பதிலை வழங்க தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு உண்மையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் காணப்பட்டிருந்தால் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய உடனேயே அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த சந்தர்ப்பத்தில் சர்வகட்சி அரசாங்கத்திற்கான யதார்த்தமான யோசனைகளை முன்வைத்து , அவை தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்களையும் நாம் முன்னெடுத்திருந்தோம். இதன் போது எம்மால் 3 பிரதான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் முதலாவது இடைவெளி ஏற்பட்ட ஜனாதிபதி பதவிக்கு எதிராக அரசியல் அதிகாரம் அற்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதோடு , பாராளுமன்றத்தில் சகல கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் ஒருவர் பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

எம்மால் முன்வைக்கப்பட்ட இரண்டாவது யோசனை , சர்வ கட்சி அரசாங்கத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் சம உரிமையுடன் பங்குதாரர்களாகக் கருதி, அந்த அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளையும் எடுத்து, அந்தக் கட்சிகள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகச் சிறிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்பதாகும்.

குறித்த சர்வகட்சி அரசாங்கத்தை இடைக்கால அரசாங்கமாகக் கருதி 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்கு அதனை வரையறை செய்து , அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது எம்மால் முன்வைக்கப்பட்ட மூன்றாவது யோசனையாகும்.

எவ்வாறிருப்பினும் இந்த யோசனைகள் எவற்றையுமே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதோடு , பாராளுமன்றத்தில் ராஜபக்ஷவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் 134 பேருடைய வாக்குகளைப் பெற்று நீங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டீர்கள்.

அதற்கமைய தற்போதிருப்பது மக்கள் ஆணையற்ற , அவர்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ள ரணில் – ராஜபக்ஷ ஆட்சியாகும். அந்த அரசாங்கத்தின் பங்குதாரர்களாகுமாறு உங்களால் எமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இது உண்மையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சி இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆகக்குறைந்தது தற்போது உங்களால் அமைக்கப்பட்டுள்ள ஆட்சிக்காலம் எதுவரையானது என்பது கூட இன்னும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. எனவே இவ்வாறான பின்புலத்தில் இனியும் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பது யதார்த்தமற்றது.

எவ்வாறாயினும், எமது நாடும் மக்களும் எதிர்நோக்கும் இந்த நெருக்கடியிலிருந்து விடுபட குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய யதார்த்தமான வேலைத்திட்டத்தை நீங்கள் முன்வைத்தால் மக்கள் தரப்பில் இருந்து சாதகமான பதிலை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

மறுபுறம் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை என்பவற்றை அடக்குமுறைகள் ஊடாக முடக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக ‘சர்வ கட்சி’ அல்லது ‘பல கட்சி’ என்ற பெயர்களில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையோ, தார்மீக உரிமையோ கிடையாது. எனவே விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

கியூ.ஆர் திட்டத்தில் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

Next Post

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் |மின்பாவனையாளர் சங்கம்

Next Post
நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் |மின்பாவனையாளர் சங்கம்

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் |மின்பாவனையாளர் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures