Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அடக்குமுறைகளை கைவிடுங்கள் | அரசை வலியுறுத்துகிறார் சஜித்

August 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலும் சஜித்தும் மூடிய அறைக்குள் தனியே நீண்ட நேரம் பேச்சு

மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட்டு, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதனை விடுத்து துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும் மக்களின் போராட்டங்களை முடக்க முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ‘சர்வகட்சி ஒன்றிணைவு’ என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளின் தலைவர் இணைந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட்டு , அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

மக்களுக்கு அவர்களது ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய உரிமை காணப்படுகிறது. வன்முறையற்ற ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்களுக்கு காணப்படும் உரிமையை எவராலும் மீற முடியாது.

ஆனால் இந்த அரசாங்கம் அரச மிலேச்சத்தனத்தையும் , அரச பயங்கரவாதத்தையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றன எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்ற ரீதியில் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள சிவில் பிரஜைகளுக்கும் , தொழிற்சங்க தலைவர்களுக்கும் நிபந்தனைகள் இன்றி நாம் ஆதரவை வழங்குவோம்.

சந்தர்ப்பவாதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும். மக்கள் ஆணைக்கு இந்தளவிற்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

மக்களிடம் நேரியாகச் சென்று அவர்களின் சுக துக்கங்கள் தொடர்பில் ஆராயுமாறு வலியுறுத்துகின்றோம். அதனை விடுத்து துப்பாக்கிகளாலும் , குண்டுகளாலும் மக்களை முடக்க முயற்சிக்க வேண்டாம் என்றார்.

Previous Post

சர்வக்கட்சி அரசின் இறுதித் தீர்மானத்திற்காக ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றன 10 சுயாதீன கட்சிகள்

Next Post

இன்று சில பகுதிகளில் ஓரளவு கனமழை பெய்யும்

Next Post
மழை , காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்

இன்று சில பகுதிகளில் ஓரளவு கனமழை பெய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures