Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பலத்த பாதுகாப்புடன் இலங்கை வர காத்திருக்கும் கோட்டாபய

August 2, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ஏற்பட்ட நிலை

இலங்கையில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் வருவது தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது.

பதவிக் காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி பதவியில் விலகிய கோட்டாபயவை மீண்டும் அரசியலில் ஈடுபட வைக்க ராஜபக்சர்கள் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் வருவதற்கு சகல உரிமைகளும் உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு வர தீர்மானம்

பலத்த பாதுகாப்புடன் இலங்கை வர காத்திருக்கும் கோட்டாபய | Gotabaya Rajapaksa Escape Colombo

நாட்டுக்கு கோட்டபாய திரும்பி வரும் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது சமகால அரசாங்கத்தின் பொறுப்பு என வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலங்கை குடிமகன், அதுமட்டுமல்ல நாட்டை வழிநடத்திய ஜனாதிபதி. அவருக்கு நாட்டுக்கு வர உரிமையுண்டு, முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர் அரசியலில் தொடர விரும்பினால் அதனை வரவேற்பதாகவும் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. சூழ்ச்சிக்காரர்களே, தலைமைப்பதவியில் மாற்றம் கோருகின்றனர் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது காரியவசம் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

பொதுஜன பெரமுன தீவிர நடவடிக்கை

பலத்த பாதுகாப்புடன் இலங்கை வர காத்திருக்கும் கோட்டாபய | Gotabaya Rajapaksa Escape Colombo

இதேவேளை தற்போதைய நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பினால், வன்முறைகள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பூரண ஆதரவுடன் ரணில் ஜனாதிபதியாக தெரிவாகி உள்ளார். இந்நிலையில் பொதுஜன பெரமுன முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு ரணில் தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரணில் மற்றும் சம்பந்தன் விரைவில் பேச்சுவார்த்தை | தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு

Next Post

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Next Post
எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures