Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை தனது தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் -சமந்தா பவர்

July 30, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பி ஓடினார் | சமந்தா பவர்

இலங்கையின் தற்போதைய பொருளாதா அரசியல் நெருக்கடிக்கு காரணமான தீர்மானங்களை இலங்கை திருத்திக்கொள்ளவேண்டும் என யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கான விஜயத்தின்போது இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் இலங்கைமக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து பைடன் நிர்வாகமும்  இந்தியாவும் கவலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பல மாதங்களாக இலங்கை மக்களிற்கு எவ்வாறு உதவிவழங்க முடியும் என்பது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் நாங்கள் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வழங்கியுள்ள 3.5 பில்லியன் டொலர் கடனுதவி மிகவும் பெறுமதி வாய்ந்தது யுஎஸ்எயிட் வழங்கும் மனிதாபிமான அபிவிருத்தி உதவிகளும் அமெரிக்கா வழங்கும் உதவிகளும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடனுதவி வழங்கியவர்கள் இணைந்துகொள்வது அடிப்படையில் அவசியமானது எனவும் சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தற்போதைய நெருக்கடிக்கு காரணமான – கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார அரசியல் தீர்மானங்களை திருத்திக்கொள்வதும் முக்கியம் என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருக்கடி முன்னைய அரசாங்கம்  நிதியை தவறாக முகாமைத்துவம் செய்தது -ஊழல் -புத்திசாலித்தனமற்ற விவசாய கொள்கைள் -கொவிட் நெருக்கடி உட்பட பல்வேறு காரணங்களால் உருவானது என தெரிவித்துள்ள சமந்தா பவர் கொவிட்டுடன் அதேகாலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தராத நிலையை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.

பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் உலகின் எந்த நாட்டு மக்களிற்கும்  பயன்அளிக்ககூடியவை என தெரிவித்துள்ள யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி கடன் பிரச்சினைக்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் உட்கட்டமைப்பு திட்டங்களிற்காக காத்திருக்கின்றன,அது சரியான விடயம் அது முக்கியமானது அபிவிருத்திக்கு உட்கட்டமைப்பு முக்கியமான வாகனம் என தெரிவித்துள்ள சமந்தா பவர் ஆனால் நிதியுதவி பெறுதல் கடன் பெறுதல் ஆகியவற்றின் விலையானது ஒருவரின் சொந்த இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் மீதான ஆழமான மீறல்களையும் அதிகளவான வட்ட வீதங்களையும் கொண்டுவரும்போது அது காலப்போக்கில் சிக்கலாக மாறும் என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை. விரைவில் 5 நாளும் பாடசாலை! கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

Next Post

இலங்கைக்கு உதவும் ஆர்வத்தில் நடிகர் கமல்ஹாசன்

Next Post
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு

இலங்கைக்கு உதவும் ஆர்வத்தில் நடிகர் கமல்ஹாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures