அண்மையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இன்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதிக்கு எழுதிய தனது பதவி விலகல் கடிதத்தில் தம்மிக்க பெரேரா,
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாட்டின் மீது அவர் கொண்டுள்ள அளப்பரிய நேசத்தை கருத்திற்கொண்டு இந்த பதவியை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

“பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் நாட்டு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் இலங்கை ஒரு தீர்வை விரைவாகக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று நான் இப்போது கருதுகிறேன்,” என்று அவர் கடிதத்தில் கூறினார்.