Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கமுயல்வது நாட்டை பெருங்குழப்பத்திற்குள் தள்ளும்- கரு

July 8, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மக்கள் பொறுப்புடன் செயற்பட்டாலே டெல்டா வைரஸிலிருந்து மீள முடியும்

மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கமுயல்வது நாட்டை பெருங்குழப்பத்திற்குள் தள்ளும் என முன்னாள்  சபாநாயகர் கருஜெயசூர்ய  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் உண்மையான செய்தியை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் செவிமடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கருஜெயசூர்ய மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அழுத்தங்களை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்துவதும் அதற்கு ஒடுக்குமுறை மூலம் தீர்வை காணமுயல்வதும் நாட்டையும் மக்களையும் பெருங்குழப்பத்திற்குள் தள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகாபிரேமசந்திர உட்பட  பலரை  சமீபத்தில் கைதுசெய்ததன் மூலம் தனது பயத்தின் அளவையும்,மக்களின் குரலை எதிர்கொள்ள முடியாத நிலையையும் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதுகள் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளிற்காக குரல்கொடுப்பவர்களிற்கு எதிரான தனது மோதல் போக்கையும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீதான தனது இயலாமையையும் அரசாங்கம் முழு உலகத்தின் முன்னாலும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் எங்களை நாகரீக ஜனநாயக உலகத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தும் அதேவேளை இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள கடும் அழுத்தங்களின் மத்தியில் நாங்கள் தொடர்ந்தும் அமைதியாகயிருக்கமாட்டோம் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் கருஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளிற்கு அரசாங்க தலைவர்கள் தீர்வை முன்வைக்க தவறியுள்ள நிலையில் எங்கள் குரலை உயர்த்துவNது ஒரே வழி ஆனால் அரச தலைவர்கள் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தியோ அல்லது வேறுவழிகளிலோ இதனை ஒடுக்குவதற்கு முயன்றால் இறுதி முடிவு அவர்களிற்கும் நாட்டிற்கும் சாதகமானதாகயிராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தலாய்லாமாவுக்கு வாழ்த்து | ”எங்கள் உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம்” | பிரதமர் மோடிக்கு சீனா எதிர்ப்பு

Next Post

அவுஸ்திரேலியாவில் நியுசிலாந்து பிரஜைகளிற்கு வாக்களிக்கும் உரிமை

Next Post
அவுஸ்திரேலியாவில் நியுசிலாந்து பிரஜைகளிற்கு வாக்களிக்கும் உரிமை

அவுஸ்திரேலியாவில் நியுசிலாந்து பிரஜைகளிற்கு வாக்களிக்கும் உரிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures