Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழக காங்கிரஸ் கட்சி ஐ.சி.யூ.வில் உள்ளது- அண்ணாமலை பேட்டி

July 7, 2022
in News, World, இந்தியா, முக்கிய செய்திகள்
0
தமிழக காங்கிரஸ் கட்சி ஐ.சி.யூ.வில் உள்ளது- அண்ணாமலை பேட்டி
  • தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையிலேயே பிரிந்து கிடக்கிறது.
  • தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது.

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவை அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் வாழ்த்த வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது. நேர்மையான முறையில் மக்களை சந்தித்து தமிழகத்திலும் நிச்சயம் ஆட்சி அதிகாரத்துக்கு வருவோம்.

மகாராஷ்டிராவில் வாரிசு அரசியலுக்கு எதிராக சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே உருவானது போல தமிழகத்திலும் உருவாக வாய்ப்பு உள்ளது என்றுதான் சொல்லி உள்ளேன்.

ஏக்நாத் ஷிண்டேவை நாங்கள் உருவாக்குவோம் என்று நான் கூறவில்லை. குடும்ப கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் மாநிலங்களில் இதுதான் நிலைமை.

பாரதிய ஜனதா கட்சி எந்த தனிமனிதனையும் நம்பி இல்லை. புதியவர்கள் பலர் இந்த கட்சியில் உருவாவார்கள். அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையிலேயே பிரிந்து கிடக்கிறது. அதற்கான பெவிகுயிக்கை வாங்கி கொடுக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதனை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஐ.சி.யூ.விலேயே உள்ளது. கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் போக மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடனேயே ஒட்டிக்கொண்டுள்ளது. தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 24 எம்.பி.க்களை பா.ஜனதா கட்சி பெறும். இதனை காங்கிரஸ்காரர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்

Next Post

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் பங்கேற்ற பிரேசில் மாடல் அழகி பலி

Next Post
உக்ரைனுக்கு ஆதரவாக போரில் பங்கேற்ற பிரேசில் மாடல் அழகி பலி

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் பங்கேற்ற பிரேசில் மாடல் அழகி பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures