Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றருக்கும் அதிக எரிபொருட்கள் மீட்பு

June 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றருக்கும் அதிக எரிபொருட்கள் மீட்பு

நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக எரிபொருள் பதுக்கல் தொடர்பில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 64,000 லீற்றருக்கும் அதிக பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்க்கப்பட்டுள்ளதோடு , 600 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்தோடு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலுள்ள எரிபொருள் தாங்கிகளை திறந்து காண்பிக்குமாறு பொதுமக்களால் பொலிஸார் வலியுறுத்தப்படுவதாகவும் , அனைவரதும் பாதுகாப்பினைக் கருதி அவ்வாறான செயற்பாடுகளில் தலையிட வேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எரிபொருள் பதுக்கல் தொடர்பில் நேற்று சனிக்கிழமை காலை வரை 670 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் போது 675 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 21,636 லீற்றர் பெற்றோல் , 33,462 லீற்றர் டீசல் , 11,100 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

சட்ட விரோதமாக எரிபொருட்களைப் பதுக்கும் இவ்வாறான சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிஸ் உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே அவர்களுடன் அநாவசியமாக மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று பொது மக்களிடம் கேட்டு;க் கொள்கின்றோம். 

பொலிஸாருடன் பொது மக்கள் முரண்படும் போது தேவையேற்படின் உயர் பொலிஸ் உத்தியோகத்தரின் ஆலோசனைக்கமைய மேலதிக பொலிஸாரை கடமையில் இணைத்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு முரண்பாடுகளின் போது அவற்றினை காணொளியாக பதிவு செய்து கொள்வதற்கும் , தேவையேற்படின் ஏனைய சட்ட நடவடிக்கைகளின் போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 அத்தோடு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலுள்ள தாங்கிகளை திறந்து காண்பிக்குமாறு பொதுமக்கள் , பொலிஸாரை வலியுறுத்துகின்றனர். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் தலைமையகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Previous Post

சீனத் தூதுவரை சந்தித்து மஹிந்த நன்றி தெரிவிப்பு

Next Post

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

Next Post
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures