Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமர் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் | சம்பிக்க

June 25, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை டலஸ் ஆரம்பித்துள்ளமை ஜனநாயகத்திற்கு சிறந்த அறிகுறி

ஜனாதிபதி உட்பட ராஜபக்ஷர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பது எப்பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது.

அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

சிறந்த திட்டங்களை முன்வைக்காவிடின் நாட்டு மக்கள் பிரதமரின் வீட்டையும் முற்றுகையிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் உள்ளது.

2020ஆம் ஆணடுடன் ஒப்பிடுகையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 3 மடங்கால் அதிகரித்துள்ளன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே இறுதி தீர்வு என பிரதமர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் என்ற ரீதியில் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை பிரதமர் இதுவரை முன்வைக்கவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கும்,மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் எத்திட்டத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு முன்வைத்த பொருளாதார மீட்சி திட்டத்தை போன்று சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடிய திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடி சவாலை ஒரு கட்சியால் மாத்திரம் வெற்றிக்கொள்ள முடியாது.அரசாங்கம் சகல கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட அளவில் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள வேண்டும். கட்சிகளுடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாவிடின் பொதுத்தேர்தலுக்கு செல்வது சாத்தியமானதாக அமையும். ஜனாதிபதி மற்றும் ராஜபக்ஷர்கள் தொடர்பில் அதிகாரத்தில் இருப்பது எப்பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது என்றார்.

Previous Post

இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணியின் இலக்கு 161

Next Post

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது

Next Post
600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures