Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையின் 1.7 மில்லியன்மக்களை காப்பாற்றுவதற்கு 47 மில்லியன் டொலர் அவசரமாக தேவை – ஐநா வேண்டுகோள்

June 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையின் 1.7 மில்லியன்மக்களை காப்பாற்றுவதற்கு 47 மில்லியன் டொலர் அவசரமாக தேவை – ஐநா வேண்டுகோள்

இலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் ஐநா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்படப்போகின்ற 1.7 மில்லியன் பேருக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்கு 47.2 மில்லியன் டொலர் தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைய நெருக்கடி காரணமாக எழுந்துள்ள அவசர தேவைகளைபூர்த்தி செய்வதற்கு ஐக்கியநாடுகளின் உதவியுடனான  பல்துறை சர்வதேச உதவி தேவை  என இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினை தொடர்ந்தே ஐநா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையில் உள்ள மனிதாபிமான அபிவிருத்தி சகாக்கள் 5.7 மில்லியன் மக்களிற்கு உடனடி உயிர்காக்கும் உதவி தேவைப்படுகின்றது என மதிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் உணவுப்பாதுகாப்பிற்கு பல விடயங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனநாங்கள் தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் பல குடும்பங்களால் அடிப்படை உணவு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் என  இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் மனிதாபிமான நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்கு அவசரநடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் அபிவிருத்தி மற்றும் சமூக பொருளாதார விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் மிகவும் வலுவானதாக காணப்பட்ட இலங்கையின் சுகாதார துறை நெருக்கடியில் சிக்குண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் வாழ்வாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதுஇமோசமாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் அதிக தாக்கத்தை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களிற்கான தனது ஆதரவை சர்வதேச சமூகம் வெளிப்படுத்தவேண்டிய தருணம் இது என ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரநிதி தெரிவித்துள்ளார்.

ஐநாஇ மற்றும்  மனிதாபிமான சகாக்கள்இ உதவி வழங்கும் சமூகத்தினர் தனியார் துறையினர் இதனிநபர்கள்  இலங்கையில் நெருக்கடியால் அதிகளவு பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் ஆண்களிற்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காக  இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கவேண்டும் என  அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன் மூலம் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடியை தவிர்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் உயர் நடுத்தர வருமான நாடாக காணப்பட்ட இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கி;ன்றது மே மாதம் பணவீக்கம் 57.4 வீதமாக காணப்பட்டது,அதேவேளை முக்கிய உணவு பொருட்கள் சமைப்பதற்கான எரிபொருள் போக்குவரத்து தொழில்துறை போள்றவற்றில் பரந்துபட்ட தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன,நாளாந்த மின்துண்டிப்பும் காணப்படுகின்றது.

உற்பத்தி;க்கான அடிப்படை உள்ளீடுகள் கிடைக்காமை,நாணயத்தின் 80 வீத தேய்மானம்,அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை,மற்றும் நாடு அதன் கடன்களை செலுத்த தவறியமை காரணமாக பொருளாதாரம் கடும் மந்தநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

உணவு நெருக்கடி குறிப்பாக உணவுப்பாதுகாப்பு விவசாயம் வாழ்வாதாரம் சுகாதார சேவைகளை பெறுதல் ஆகியவற்றை பாதித்துள்ளது. இறுதி அறுவடையில் உணவு உற்பத்தி கடந்த வருடத்தை விட 40 முதல் 50 வீதம் குறைவாக காணப்பட்டது,தற்போதைய விவசாயபருவகாலம் ஆபத்தில் சிக்குண்டுள்ளது,விதைகள் உரங்கள் எரிபொருள் கடன் தட்டுப்பாடே இதற்கு காரணம்.

இலங்கையின் 22 மில்லியன் சனத்தொகையில் ஐந்து மில்லியன் மக்கள் உணவு உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்.

சமீபத்தைய ஆய்வுகள் 86 வீதமான வீடுகள் உணவுண்பதை குறைப்பது போன்றவற்றை பின்பற்றுவதை வெளிப்படுத்தியுள்ளது.

Previous Post

அரச நிர்வாகத்தில் இனி எந்தப் பதவிகளையும் ஏற்கமாட்டேன்

Next Post

மட்டக்களப்பில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 4 பேர் கைது – இருவர் தலைமறைவு

Next Post
மட்டக்களப்பில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 4 பேர் கைது – இருவர் தலைமறைவு

மட்டக்களப்பில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 4 பேர் கைது - இருவர் தலைமறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures