Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீரில்லை, எரிபொருளில்லை எவ்வாறு மாணவர்கள் நாளை பாடசாலைக்கு செல்ல முடியும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

June 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
‘போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்’: இலங்கை ஆசிரியர் சங்கம்

நாடு பூராகவும் நாளை (06) பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள போதிலும், நாட்டின் அதிகளவான பாடசாலைகளுக்கான நீர் விநியோக வசதி நிறுத்தப்பட்டுள்ளது. 

மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றபோது தங்களுக்கு தேவையான நீரை எவ்வாறு பெற்றுக்கொள்வார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

மேலும், எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொது போக்குவரத்து, பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள், வேன்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள்  பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், போக்குவரத்த கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே, அவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் நிவாரணத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

கொழும்பில் அமைந்துள்ள ‘குரு மெதுர’வில் சனிக்கிழமை (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

” தற்போது நாட்டு மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அன்றாட உணவுப் பொருட்களுக்கான செலவு, எரிவாயு மற்றும் எரிபொருளுக்கான செலவு, போக்குவரத்துக்கான  செலவு ஆகியன அதிகரித்துள்ள சூழ்நிலையில், கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பாடசாலை நீர் கட்டணத்தையும் பாடசாலை மாணவர்களது பெற்றோரே செலுத்த வேண்டியுள்ளது. 

இந்த ஆண்டு ஜனவரிக்கு முன்னர், பாடசாலைக்கு நீர் கட்டணங்கள் அறவிடப்படவில்லை. எனினும்,தற்போது  பாடசலைக்கான நீர் வழங்கல் கட்டணத்தை பாடசாலை சமூகமே செலத்த வேண்டியுள்ளது.

இவை பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு மேலதிக செலவை ஏற்படுத்தியுள்ளதுடன், பொருளதார ரீதியாக அவர்கள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். 

நாட்டின் அதிகளவான பாடசாலைகளில் குறிப்பாக மேல் மாகாணத்தின் பால பாடசாலைகளில் நீர் விநியோக வசதி நிறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றபோது தங்களுக்கு தேவையான நீரை எவ்வாறு பெற்றுக்கொள்வார்கள். இதனை கல்வி அமைச்சு தேடிப்பார்த்து இந்த பிரச்சினைக்கு முடிவு எடுக்க வேண்டும்.

அத்துடன், மாணவர்களின் போக்குவரத்துக்கான  செலவு மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்வு எடுக்க வேண்டும், இல்லையெனில், தொழிற்சங்க ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் தயங்க மாட்டோம்” என்றார்.

Previous Post

இலங்கைக்கு மருந்துகளை வழங்கியது சீனா

Next Post

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்   

Next Post
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்   

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures