Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபயவுக்காக ரணில் போடும் டொனமூர் அரசியலமைப்பு முடிச்சு

June 3, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டாபயவுக்காக ரணில் போடும் டொனமூர் அரசியலமைப்பு முடிச்சு

ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்த 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவது சம்பந்தமாக விரிவான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

இவ்வாறான நிலைமையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரங்களை நீக்குவதற்கு பதிலாக வேறு வகையான யோசனைகளை கொண்டு வந்து, அரசியல் பொறியை வைத்து வருவதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்தின் தெரிவுக்குழு

கோட்டாபயவுக்காக ரணில் போடும் டொனமூர் அரசியலமைப்பு முடிச்சு

கடந்த மே 29 ஆம் திகதி விசேட உரை ஒன்றை நிகழ்த்த ரணில் விக்ரமசிங்க, டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த தெரிவுக்குழு முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

நேரடியாக 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக பிரதமர், இவ்விதமாக மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய சிறிய வழிமுறைகைள கையாண்டு வருகிறார் எனவும் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

டொனமூர் அரசியலமைப்புச் சட்டம் 1931 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அதன் பின்னர் கொண்டு வரப்பட்ட சோல்பரி அரசியலமைப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதுடன் அது 1977 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இவ்வாறான நிலையில், மீண்டும் டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைவாக 10 தெரிவுக்குழுக்களை நியமிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

இதன் மூலம் அவர் அரசியல் ரீதியான தந்திரம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கோட்டாபயவுக்காக ரணில் முன்வைக்கும் யோசனைகள்

2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, போத்துகேயர் இலங்கையை ஆக்கிரமித்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை உற்சவமாக கொண்டாட திட்டமிட்டார்.

தற்போது அதே விதத்தில் ஆங்கில ஏகாதிபத்திய காலத்தில் இருந்த துதிப்பாடும் முறையை கூறி சமூகத்தை தவறான வழிநடத்த பல்வேறு வழிமுறைகளை முன்னெடுத்து வருகிறார் எனவும் கோட்டாபய ராஜபக்சவுக்காகவே அவர் டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விடயங்களை மீண்டும் கொண்டு வருவது தொடர்பிலான யோசனைகளை முன்வைப்பதாகவும் அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Previous Post

கச்சதீவினை மீள பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் | சி.வி.கே சிவஞானம்

Next Post

ரஜினியை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

Next Post
ரஜினியை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

ரஜினியை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures