Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களே அவசியம்

June 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களே அவசியம்

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களே எடுக்கப்பட வேண்டும். காரணம் தேசிய வரி வருமானத்தில் 86 சதவீதம் அரச ஊழியர்களுக்கான சம்பள கொடுப்பனவிற்கும் , ஓய்வூதியம் வழங்குவதற்கும் செலவிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் கொள்கை தயாரிப்பாளர்கள் தொழிநுட்ப ரீதியிலான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

காரணம் மாதாந்தம் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறும் வரி வருமானத்தில் 86 சதவீதம் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள கொடுப்பனவிற்கும் ஓய்வூதியத்தை வழங்குவதற்கும் செலவிடப்படுகிறது.

இவ்வாறு வருமானத்தில் பெருந்தொகை இதற்காக செலவிடப்பட்டால் ஏனைய செலவுகளுக்கு என்ன செய்வது?

இதன் காரணமாகவே நாட்டில் கால காலமாக கடன் பெறப்படுகிறது. இந்த முறைமையே தொடர்ந்தும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்பட்ட கடன்களினாலேயே தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த கடன்களை மீள செலுத்துவதிலும் பாரிய சிக்கல் காணப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

எவ்வாறிருப்பினும் சகலருக்கும் நிவாரணம் வழங்கும் வகையிலான வரவு – செலவு திட்டமொன்றை விரைவில் முன்வைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பிலும் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டது. விரைவில் அதனை முன்வைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றார்.

அண்மையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் அவை உண்மைக்கு புறம்பான செய்திகள் என்று பிரதமர் அலுவலகம் மறுப்பு வெளியிட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் பிரதமர் தெரிவித்துள்ளதைப் போன்று நிவாரண வரவு – செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்பு உள்ளடக்கப்பட்டிருக்குமா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எளிய முறையில் செய்யலாம் மாம்பழ பாயாசம்

Next Post

வரி அறவீடுகளில் திருத்தம்

Next Post
வரி அறவீடுகளில் திருத்தம்

வரி அறவீடுகளில் திருத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய ப்ரபாத் ஜயசூரியவுக்கு கண்டன எச்சரிக்கை

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய ப்ரபாத் ஜயசூரியவுக்கு கண்டன எச்சரிக்கை

August 25, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தேர்தல் வழக்கு : தமிழக முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

August 25, 2026
“இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்” : யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 

“இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்” : யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 

August 25, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தயார் நிலையில் உள்ளது – நளிந்த ஜயதிஸ்ஸ 

August 25, 2026

Recent News

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய ப்ரபாத் ஜயசூரியவுக்கு கண்டன எச்சரிக்கை

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய ப்ரபாத் ஜயசூரியவுக்கு கண்டன எச்சரிக்கை

August 25, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தேர்தல் வழக்கு : தமிழக முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

August 25, 2026
“இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்” : யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 

“இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்” : யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 

August 25, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தயார் நிலையில் உள்ளது – நளிந்த ஜயதிஸ்ஸ 

August 25, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures