Friday, July 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அளவுக்கு மிஞ்சி பதுக்காதீர்கள்! உயிரிழப்புக்களுக்கு நீங்களும் பொறுப்பாளிகளே!

May 27, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஹற்றன் உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

Share

பெரும் நெருக்கடி நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது சாதாரண மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இலங்கையின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதாக பலரும் கருத்துத் தெரிவிக்கின்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு மக்கள் முண்டியடித்து வரிசைகளில் நிற்கின்ற அவலநிலை தோற்றம் பெற்றுள்ளது.

பெற்றோல், மண்ணெண்ணய், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் திண்டாடும் இச் சந்தர்ப்பத்தில் பலர் அளவுக்கு அதிகமாக பொருட்களை கொள்வனவு செய்து சேமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

“ உணவு தட்டுப்பாடு தீவிரமடைந்தால் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாத காலப்பகுதியில் மக்கள் உணவின்றி பட்டினியால் உயிரிழக்கும் அவல நிலை ஏற்படும். நடுத்தர மக்களால் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கின்றன. பொது மக்கள் இயலுமான அளவு வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் கட்டாயம் ஈடுப்பட வேண்டும்” என தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் கூறிகிறார்.

இவ்வாறான நிலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது தமது தேவைக்கு மேலதிகமாக பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டும். ஏனெனில் ஏனைய மக்களுக்கும் பொருட்கள் கிடைக்காது அவர்களிடம் பணம் இருந்தும் பொருட்களை வாங்க முடியாது பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்படுவர்.

“ நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது என்ற செய்திகள் வெளியாகியவுடன் வசதி படைத்தவர்கள் அளவுக்கு அதிகமாக பொருட்களை வாங்கி சேமித்து வைக்கின்றனர். இதனால் கடைகளிலும் இன்னும் 2 வாரங்களுக்கு தேவையான பொருட்களே சேமித்து வைக்கப்பட்டுள்ளன. பொருட்களை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருகை தந்தால் மாத்திரமே மக்களுக்குத் தேவையான பொருட்கள் எதிர்காலத்தில் கிடைக்கும்” என்கிறார் கொழும்பு புறக்கோட்டையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகரான கிருபா.

“ நாட்டின் கையிருப்பில் உள்ள, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகை குறித்து, கணக்கிடப்பட்டு வருவதாகவும் இந்தக் கணக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தொகை குறித்து தீர்மானிக்கப்படும்” என சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.

எந்தப்பொருளாக இருந்தாலும் குறிப்பாக எரிபொருளாக இருந்தாலும் உங்கள் வாகனங்களில் சேமிக்கக் கூடிய எரிபொருளை பெற்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். அவ்வாறு இல்லாது மேலதிகமாக எரிபொருளை பெற்று வேறு கேன்களில் சேமித்து நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தாதீர்கள். 

கடந்த சில தினங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புக்களில் 137 பேர் எரிபொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததன் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 ஆயிரம் லீற்றர் பெற்றோல் , 22 ஆயிரம் லீற்றர் டீசல், 10 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து பதுக்கி வைத்து எரிபொருளை விற்பனை செய்பவர்கள் தொடர்பான தகவல்களை 118 மற்றும் 1997 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தெரிவியுங்கள். அத்துடன் எரிபொருட்களை கொள்வனவு செய்து அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த FuelIMC என்ற செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2 நாட்களேயான சிசு உயிரிழந்தமை அனைவரும் அறிந்ததே. இவ்வாறு 2 நாட்களேயான சிசு உயிரிழந்தமைக்கு எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைத்தவர்களும் ஏதோவொரு வகையில் கரணமானவர்களே. எனவே ஏனைய மக்களின் உயிர்களையும் அவர்களின் பசியைப் போக்கவும் அனைத்து மக்களும் சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியம். 

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் காரணமாக அமைந்தாலும் நாட்டு மக்களாகிய நாம் தற்போதைய நிலையை உணர்ந்து தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி பதுக்காது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒத்தழைப்பு வழங்குவது நம் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகவுள்ளது.

( வீ.பி. )

Previous Post

பெருந்தொற்றாக மாறுமா ‘மங்கி பொக்ஸ்‘

Next Post

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

Next Post
பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அதில் கைவைக்கோம்! – அமைச்சர் சந்திரசேகர்

இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம்

July 18, 2025
சாதனை படைக்கும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ பட முன்னோட்டம்

சாதனை படைக்கும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ பட முன்னோட்டம்

July 18, 2025
மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

July 17, 2025
கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

July 17, 2025

Recent News

மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அதில் கைவைக்கோம்! – அமைச்சர் சந்திரசேகர்

இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம்

July 18, 2025
சாதனை படைக்கும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ பட முன்னோட்டம்

சாதனை படைக்கும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ பட முன்னோட்டம்

July 18, 2025
மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

July 17, 2025
கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

July 17, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures