Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையைப்போல  உலகநாடுகளிலும் போராட்டங்கள் வெடிக்கும்  | IMF தலைவர் எச்சரிக்கை

May 24, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? | ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

அரசாங்கமொன்று சீராக இயங்காத பட்சத்தில் இலங்கையில் இடம்பெற்றுவருவதைப்போன்ற போராட்டங்கள் ஏனைய உலக நாடுகளிலும் எழுச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா எச்சரித்துள்ளார்.

அரசாங்கங்கள் நாட்டிலுள்ள மிகவும் வறிய சமூகத்திற்கு ஏற்றவகையில் உணவுப்பொருட்கள் மற்றும் வலுசக்தியின் விலைகளைப் பேணவேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகரித்துவரும் வாழ்க்கைச்செலவின் காரணமாக உலகளாவிய ரீதியில் பலரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனை முன்னிறுத்தி வழங்கப்படும் உதவிகள் மிகவும் பின்தங்கிய தரப்பினரை இலக்காகக்கொண்டவையாகவும், அவர்களை நேரடியாகச் சென்றடையக்கூடியவையாகவும் அமையவேண்டியது அவசியம் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

world bank: IMF chief denies altering World Bank report to appease China -  Times of India
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா

அதுமாத்திரமன்றி அரசாங்கம் உரியவாறு செயற்படாதவிடத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் நிலவுவதைப்போன்ற அமைதியின்மை நிலை கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு முன்னரான காலகட்டத்தில் பிரான்ஸ் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நிலவியதாகச் சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, மக்களின் ஆதரவின்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும், வெகுவாக அதிகரித்துவந்த சமத்துவமின்மையுமே அதற்கான பிரதான காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பல்வேறு வழிமுறைகளிலும் மக்களுடன் தொடர்புபடக்கூடியவாறான கொள்கைத்தீர்மானங்களை மேற்கொள்வது அவசியம் என்றும் கொள்கைகள் வெறுமனே தாள்களில் எழுதப்பட்டவையல்ல, மாறாக அவை மக்களை முன்னிறுத்தியவையாக அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Previous Post

இராணுவ உயர் அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய ஜனாதிபதி

Next Post

ப்ரெய்ன் ஃபோக் ( Brain Fog)  நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

Next Post
ப்ரெய்ன் ஃபோக் ( Brain Fog)  நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

ப்ரெய்ன் ஃபோக் ( Brain Fog)  நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures