Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் ரணில் நன்றி தெரிவிப்பு

May 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் ரணில் நன்றி தெரிவிப்பு

இலங்கை மக்களுக்கு உதவுவதற்கென இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழக அரசினால் வழங்கப்பட்ட அத்தியாவசியப்பொருட்களான அரிசி, பால்மா மற்றும் மருந்து ஆகிய நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட ‘டான் பின்-99’ என்ற கப்பல் கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடைந்தது.

கொழும்புத்துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட இந்தப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கையளித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவினால் இந்த உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டமைக்கு நன்றி கூறும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடமிருந்து சுமார் 2 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்து, பால்மா மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, எமக்கு ஆதரவு வழங்கியமைக்காக இந்திய மக்களுக்கும் நன்றி கூறுகின்றோம் என்று பிரதமர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 ‘அத்தோடு இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் வழங்கப்பட்ட உதவிகளையும் நான் பாராட்டுகின்றேன்’ என்றும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எரிபொருள் கிடைக்காமையால் இரண்டு நாட்களேயான சிசுவின் உயிர் பறிபோனது.

Next Post

இராணுவ உயர் அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய ஜனாதிபதி

Next Post
தடுப்பூசி வேண்டாம்… தனி ‘ஸ்டைலில்’ கொரோனாவை எதிர்கொள்ள வடகொரிய அதிபர் கிம் உத்தரவு

இராணுவ உயர் அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures