Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மே 9 வன்முறைகள் | 1500 பேர் இதுவரை கைது – 677 பேருக்கு விளக்கமறியல்

May 22, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

“கோட்டா கோ கம”, “மைனா கோகம” அமைதி போராட்டத்தில்  அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் ( மே 9 வன்முறைகள் ) தொடர்பில் இன்று ( 22) நண்பகலாகும் போது  சுமார் 1500 பேரை  பொலிஸார் நாடளாவிய ரீதியில் கைது செய்திருந்தனர்.  

நாடளாவிய ரீதியில்  இதுவரை பதிவானதாக 844 சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில்,  அவை தொடர்பில்  இவர்களைக் கைது செய்ததாக  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 

இந் நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 1500 பேரில் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு 677 பேர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.`

 இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும்  152 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 101 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

9 ஆம் திகதி பதிவான வன்முறைகளின் ஆரம்ப புள்ளியான, “கோட்டா கோ கம” மற்றும் “மைனா கோ கம”  மீதான அத்து மீறிய தாக்குதல்கள் தொடர்பில்  சி.ஐ.டி.யின்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் சந்ரவின் கீழ் இடம்பெறுகிறது. இந் நிலையிலேயே அது தவிர்த்த ஏனைய வன்முறை சம்பவங்கள் தொடர்பில்  மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கலின் கீழும் மாவட்டங்களின் பிரதிபொ பொலிஸ் மா அதிபரின் கீழும் அவ்வந்த பொலிஸ் பிரிவுகளின் குற்றத் தடுப்புப்  பிரிவுகளினால் விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இந்த  1500 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 எவ்வாறாயினும் அரசியவாதிகள் வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் விலைவித்தமை தொடர்பிலேயே பெரும்பாலான கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன்,  குறித்த அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகள், அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய அப்பாவிகள் பலரைக் கைது செய்துள்ளதாக  சட்டத்தரணிகள் பலர் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நாளை மின்வெட்டு தொடர்பான விபரம்

Next Post

வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்

Next Post
வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்

வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures