Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமர் அதிரடி நடவடிக்கை! | அத்தியாவசிய தேவை தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட குழு

May 13, 2022
in News, Sri Lanka News
0
பிணை முறி மோசடி: ரணில் விசாரணைக்கு அழைப்பு

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் நிலவும் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைகளை பெற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் திரவங்கள் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு யோசனைகளை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்து பொருட்கள் விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துக்கொள்வதற்கு தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தனவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன்,உரம் தட்டுப்பாடு மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்கும் பொறுப்பு  ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஆராயும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் உரிய துறைசார் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்வு தொடர்பிலான அறிக்கையை பிரதமரிடம் நேரடியான கையளிக்கவுள்ளனர்.

Previous Post

மார்பகப் புற்றுநோய்க்கு முழுமையான நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

Next Post

ஊரடங்கின் போது மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

Next Post
வீட்டிலிருந்து வெளியேற ஒருவருக்கே அனுமதி – இலங்கையில் கடுமையான தடைகள்

ஊரடங்கின் போது மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures