Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மின்தடையால் திருமண விழாவில் மணப்பெண்கள் மாறியதால் பரபரப்பு

May 11, 2022
in News, இந்தியா
0
மின்தடையால் திருமண விழாவில் மணப்பெண்கள் மாறியதால் பரபரப்பு

மின்சாரத் துண்டிப்பால்  பல்வேறு இன்னல்களுக்கும் மக்கள் உள்ளாவது வழமையாகும்.

ஆனால் இந்த மின்சாரத் துண்டிப்பு இந்தியாவைச் சேர்ந்த சகோதரிகள் இருவரின் திருமண வாழ்வையே தடம்புரளச் செய்துள்ளது.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள அஸ்லனா கிராமத்தைச் சேர்ந்த சகோரிகளுக்கு ஒரே நாளில் திருமணத்திற்கு நாள் நிர்ணயிக்கப்பட்டது.

திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மண மேடை எங்கும் இருள் நிலவியது.

இந்நிலையில் இந்து  மத பாரம்பரிய வழக்கப் பிரகாரம் சிவப்பு நிற  பட்டாடை அணிந்து மலர்களான  முகத்திரை அணிவிக்கப்பட்டு  மணமேடைக்கு மணமகள்களான  சகோதரிகள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.

மணமேடையில் குத்துவிளக்குகள் மற்றும் ஹோம குண்டத்திலிருந்து  வெளிப்பட்ட சொற்ப வெளிச்சத்தைத் தவிர பெருமளவில் இருள் நிலவியது.

இந்நிலையில் மணமகள்மார் இருவரும் தவறுதலாக அவரவர்க்குரிய மணமகனுக்கு அருகில் அமர வைக்கப்படாது  இடம்மாற்றி அமர வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து மதகுரு முதலாவது  சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை இரண்டாவது  சகோதரிக்கும் இரண்டாவது சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை முதலாவது சகோரிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

மதகுரு  இருளில் மணமகள்மாரை அடையாளம் தெரியாது  தவறாக  வழிநடத்தியதாலேயே இவ்வாறு திருமணத்தில் ஆள்மாறாட்டம் இடம்பெற்றதாக மணமகள்மாரின் தந்தையான ரமேஷ் லால் தெரிவித்தார்.

இந்த விபரீத திருமணம் குறித்து பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் செவ்வாய்க்கிழமை(10) இரவு தகவல்களை வெளியிட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ஊரடங்கை நீக்குவதா? நீடிப்பதா? | இராணுவப் பிரசன்னம் குறித்து பாதுகாப்புச் செயலரின் கருத்து

Next Post

அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கலா?

Next Post
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! – அரசாங்கம் அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கலா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures