Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒரு வருடத்தின் பின் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர்

May 4, 2022
in News, Sri Lanka News
0
ஒரு வருடத்தின் பின் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும்  11 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு  ஏறாவூர்  சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று புதன்கிழமை (04)  உத்தரவிட்டார்.

இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ஆம் திகதி  தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாமல் காணொளி மூலம் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று எடுக்கப்பட்டபோது சுமார் ஒருவருடத்துக்கு பின்னர்  நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியை விட்டு விலகமாட்டேன் | மஹிந்த அதிரடி

Next Post

கையிருப்பில் 50 மில்லியன் டொலர் கூட நாட்டில் இல்லை | நிதியமைச்சர் அலி சப்ரி

Next Post
தற்காலிக மனிதாபிமான நிவாரணமே ஒரு இலட்சம் | நீதி அமைச்சர் சப்ரி

கையிருப்பில் 50 மில்லியன் டொலர் கூட நாட்டில் இல்லை | நிதியமைச்சர் அலி சப்ரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures