Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம் | இதுவரையில் அகதிகளாக 80பேர்

May 2, 2022
in News, Sri Lanka News
0
இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம் | இதுவரையில் அகதிகளாக 80பேர்

இன்று  (2) அதிகாலை 2 மாத கைக்குழந்தையுடன் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த  மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்  தமிழர்கள் இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி  படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று (1)  நள்ளிரவு யாழ்ப்பாணம்  – நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு   படகில் புறப்பட்ட வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தமிழர்கள் திங்கட்கிழமை அதிகாலை  2 மணி அளவில் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் இரண்டு மாத கைக்குழந்தையும் அடங்கும்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணைக்குப் பின் இந்த 5 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபட்டைத்துள்ளார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

லிபியாவுக்கு இடம்பெற்ற நிலை எமது நாட்டுக்கு ஏற்பட இடமளிக்கவேண்டாம் | விமல் வீரவன்ச கோரிக்கை

Next Post

மக்களுக்கு அறிவிக்கப்பட்ட தடை நீக்கம்!

Next Post
அமெரிக்க தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டது

மக்களுக்கு அறிவிக்கப்பட்ட தடை நீக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures