Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்திய மாணவர்கள் சீனாவில் மேற் படிப்பை தொடர அனுமதி

April 30, 2022
in News, இந்தியா
0
இந்திய மாணவர்கள் சீனாவில் மேற் படிப்பை தொடர அனுமதி

சில இந்திய மாணவர்கள் படிப்பை தொடர சீனாவுக்கு திரும்பி வருவதற்கு சீனா அனுமதி அளித்துள்ளது.

சீனாவில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் மேற்படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்வியை கற்கின்றனர்.

Entry of foreign students still not allowed in China, remain in touch with  universities: Indian Embassy

கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், குறித்த மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றனர்.

கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், சீனாவில் கல்வி நிலையங்கள் நேரடி வகுப்புக்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய மாணவர்களும் தங்கள் மேற் படிப்பை தொடர சீனாவுக்கு செல்ல விரும்புகிறார்கள்.

ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில், விமான போக்குவரத்தை சீனா நிறுத்தியுள்ளது.

அத்துடன் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. இதனால், இந்திய மாணவர்கள் இணையத்தள வகுப்புகளில் தான் கல்வியை தொடர முடிகிறது.

இப்பிரச்சினையை சீன அரசின் கவனத்துக்கு இந்தியா எடுத்துச் சென்றது. இருந்தாலும், சீனா சற்று தாமதித்தது. இந்தநிலையில், திடீர் திருப்பமாக இந்திய மாணவர்கள் சீனாவுக்கு வந்து படிப்பைத் தொடர அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து இந்தியாவிலுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:

இந்திய மாணவர்கள் படிப்பை தொடர சீனா வருவதற்கு சீனா உயர் முக்கியத்துவம் அளிக்கிறது.

சீனாவுக்கு திரும்பிய ஏனைய நாடுகளின் மாணவர்கள் பின்பற்றிய நடைமுறையையும், அனுபவத்தையும் இந்தியாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம்.

AICTE, UGC Warn Students Willing To Pursue Higher Studies In China

இந்திய மாணவர்கள் சீனாவுக்கு வருவதற்கான பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தியா செய்ய வேண்டியதெல்லாம், எந்தெந்த மாணவர்கள் உண்மையிலேயே அவசியம் சீனாவுக்கு திரும்ப வேண்டியவர்கள் என்ற பட்டியலை அளிப்பதுதான். அந்த மாணவர்களை நாங்கள் அனுமதிப்போம் எனத் தெரிவித்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

லிட்ரோ நிறுவன தலைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Next Post

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

Next Post
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures