Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தினர்

April 24, 2022
in News, Sri Lanka News
0
சமல் வீட்டில் அவசரமாக ஒன்று கூடிய ராஜபக்சர்கள்?

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ராஜபக்ச குடும்பத்தினர் இடையில் இன்று முற்பகல் விசேட சந்திப்பு நடந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தினர் மூத்தவரான சமல் ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதன் போது நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை சம்பந்தமான விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புகள், எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஆகியன காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்களின் போராட்டம் ஆரம்பமான சூழ்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரை தவிர அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜபக்சவினர் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்தனர். புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையிலும் ராஜபக்சவினர் எவரும் இடம்பெறவில்லை.

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வழிவிட வேண்டும் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,  ராஜபக்ச குடும்பத்தினர்  இடையில் இந்த பேச்சுவார்த்தை நடத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

மகிந்தவின் உடல்நிலைக்கு என்ன நடந்தது| பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

Next Post

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

Next Post
பள்ளிக்கூடத்திற்குள் சீருடை அணிந்துதான் செல்ல வேண்டும் | குஷ்பு

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures