Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முடங்கப்போகிறதா இலங்கை | தேசிய எதிர்ப்பு தின போராட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

April 20, 2022
in News, Sri Lanka News
0
கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம்!- பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

இலங்கையில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்தை அதாவது ஏப்ரல் 20ஆம் திகதியை தேசிய போராட்ட நாளாக அறிவித்து அனைத்து பணியிடங்களிலும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இலங்கையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

நாடு முழுவதும் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த தேசிய எதிர்ப்பு தின போராட்டம் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கும் சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் இலங்கை முழுவதும் முடங்கலாம் எனவும் சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இன்றையதினம் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுவதுடன், பாடசாலைகளுக்கான சேவைகளில் ஈடுபடும் வான் மற்றும் பேருந்துகளும் இன்றைய தினம் தாம் சேவைகளில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ரம்புக்கனை கலவரத்தில் இறந்த நபரை நான் நன்கு அறிவேன் | ரணில் வெளியிட்ட தகவல்

Next Post

ரம்புக்கனை சம்பவம் | பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை | ஜனாதிபதி

Next Post
கோத்தபாயவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியா?

ரம்புக்கனை சம்பவம் | பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை | ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures