Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எக்காரணிகளுக்காகவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகமாட்டார் | சாகர காரியவசம்

April 17, 2022
in News, Sri Lanka News
0
கோத்தபாயவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியா?

அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்களை மீண்டும் ஒன்றிணைத்து அமைக்கும் இடைக்கால அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மை மீது நம்பிக்கை கொள்ள முடியாது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அமைச்சரவையே ஸ்தாபிக்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்கள் தற்போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக்கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறார்கள்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு பிரதான எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட்டுக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்களை ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது எந்தளவிற்கு நம்பகத்தன்மையாக அமையும் என்பது கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தல் யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அரசாங்கத்திற்கு துரோகமிழைத்த தரப்பினருடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு எதிர்வரும் வாரம் சிறந்த தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.எக்காரணிகளுக்காகவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகமாட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையை ஸ்தாபிக்க வேண்டும் என பெரும்பாலான தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அமைச்சரவையே ஸ்தாபிக்கப்படும். பாராளுமன்ற மட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இனிவரும் நாட்களில் முன்னெடுப்போம் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

லக்னோவிடம் வீழ்ந்த மும்பைக்கு 6 ஆவது தொடர்ச்சியான தோல்வி

Next Post

காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள வடக்கு இளையோரிடம் சிறிதரன் எம்.பி கோரிக்கை

Next Post
அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளது | சிவஞானம் சிறீதரன்

காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள வடக்கு இளையோரிடம் சிறிதரன் எம்.பி கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures