Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எமது பிரச்சினைகளை ஒரங்கட்டாது பேரம்பேசலில் தமிழ்தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டும் | சிவாஜி

April 12, 2022
in News, Sri Lanka News
0
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான  கூட்டணிக்குள் பிளவு  இல்லை!

தமிழ்த்தேசியப் பரப்பில் செயற்பட்டுவருகின்ற கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கோ  அவநம்பிக்கை பிரேரணைக்கோ ஜனாதிபதி முறை ஒழிப்புக்கோ தங்களது ஆதரவை தெரிவிப்பதாயின் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத்தீர்வு தொடர்பில் பேரம்பேசியே  ஆதரவை வழங்கவேண்டும் அதனை விடுத்து ஆதரவு வழங்குவார்கள் என்றால் அதற்கு எதிராக எமது மக்களை வைத்தே  போராடுவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

யாழ்.ஊடக அமையத்தில் திங்கட் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று ஏற்பட்டுள்ள தற்கால பிரச்சினைகளை வைத்து தமிழ்த்தேசியப் பரப்பில் செயற்பட்டு வருகின்ற கட்சிகள் ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக  நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்லது ஆட்சி மாற்றம் இல்லையென்றால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்பது தொடர்பில் அறிக்கைகளை வெளியி்டு வருகின்றார்கள்.

ஆனால் இந்த அறிக்கையில் ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அது இடைக்காலத்தீர்வா அல்லது நிரந்தர தீர்வா என்பது தொடர்பில் எந்த நிபந்தனையும் இல்லை ஆட்சி மாற்றம் கொண்டு வந்து என்ன செய்யப்போகின்றோம் ஆட்சிகள் மாறலாம் காட்சிகள் மாறாது வேண்டும் என்றால் வேகம் கூடும் அல்லது குறையும் கடந்த ஆட்சி என்று செல்லுகின்ற நல்லாட்சி எனக்கூறும் மோசமன ஆட்சியில் மூன்று தடவைகள் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை இரண்டு தடவை நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் காப்பாற்றப்பட்டார்.

ஒருதடவை நம்பிக்கை வாக்கொடுப்பின்‌ போது காப்பாற்றப்பட்டார். நாங்கள் இதன்போது எங்களுக்கு என்று எத்தகையவற்றை  வாக்குறுதியாகப் பெற்றோம். அப்போது புதிய அரசியல் அமைப்பு வராது என்ற நிலை உருவானது இப்போதும் புதிய அரசியல் அமைப்பு இந்த ஆட்சியி முடியும் வரை அதற்கான   இடமிருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

அவ்வாறு என்றால் என்ன செய்யப்போகின்றார்கள் ஏதாவது திருத்தங்கள் வரப்போகி்றது அவ்வாறு வருகின்றபோது

தமிழ் மக்களுடைய பிரச்சினையில் வடக்கு கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகத்தை கோரவேண்டும். இதன் மூலம் வடக்கு கிழக்கினை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கமுடியும் . தற்போதைய சூழலில் நம்பிக்கையில்லாப் பிரேரணையோ கொண்டுவரப்படுகின்ற போது  தமிழ்தேசியத்தரப்பில் செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின்  கையொப்பம் நிச்சமாக தேவை அவ்வாறான நிலையில் எமக்கான தேவை எதுவே அதனை முன்னிறுத்தி  செயற்படவேண்டும்.

எனவே எங்களுடைய மக்கள் இன்றைய சூழலில் பெரியளவில் ஆர்ப்பாட்டங்களில் கவனம் செலுத்தவில்லை காரணம்ஆட்டிஆளர்களின் ஏமாற்றங்களை அறிந்தவர்கள் எனவே தமிழ்த்தேசியப் பரப்பில் இருப்பவர்கள் எத்தகைய பிரேரணைகள் வந்தாலும் மக்களுக்குதேவையான விடையத்தை முன்னிறுத்தியே செயற்படவேண்டும்.

இதனைவிடுத்து பேரம்‌ பேசாது விட்டால் அந்த அணிகளுக்கு எதிராக நாங்கள் எமது மக்களைக் கொண்டு போராட வேண்டிவரும்  இதனால் ஒற்றுமை குலையும் எனக்கூறினால் அதில் தப்பில்லை ஏனெனில் எங்களுக்கு வாழ்வா சாவா என்ற போராட்டமே  தேசியப்பிரச்சினையுடன் நாம் செல்லத்தான் வேண்டும் ஆனால்      எங்கள் பிரச்சினையைத் தூக்கி வைத்துவிட்டு அப்பிரச்சினைக்கு போகமுடியாது என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

‘ரஹ்மான்… முதலில் பெயரை தமிழில் மாற்றுங்கள்’ | ப.ஜ.க முக்கியஸ்தர் எஸ்.வி. சேகர்

Next Post

ஒலிவர் விருது | இலங்கையருக்கு சிறந்த நடிகருக்கான விருது

Next Post
ஒலிவர் விருது | இலங்கையருக்கு சிறந்த நடிகருக்கான விருது

ஒலிவர் விருது | இலங்கையருக்கு சிறந்த நடிகருக்கான விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures