Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ஏ.ஆர் ரஹ்மான் ஆல்பத்தில் பாடி, நடித்துள்ள சன் டிவி ‘சுந்தரி’ சீரியல் நடிகை!

April 11, 2022
in Cinema, News
0
ஏ.ஆர் ரஹ்மான் ஆல்பத்தில் பாடி, நடித்துள்ள சன் டிவி ‘சுந்தரி’ சீரியல் நடிகை!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மூப்பில்லா தமிழே தாயே ஆல்பத்தில் பணியாற்றும் வாய்ப்பு கேப்ரியல்லாவிற்கு கிடைத்தது.

 கேப்ரியல்லா செல்லஸ், ஒரு டிக்டாக்கராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் வைரலான டிக்டாக் வீடியோக்கள் வழியாக புகழ் பெற்ற பிறகு விஜய் டிவியின் பிரபல காமெடி ஷோவான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார் கேப்ரியல்லா செல்லஸ்.

அதன்பிறகு ‘ஐரா’ என்கிற திகில் திரைப்படத்தின் வழியாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையயும் பெற்றார். ஐரா திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா கேரக்டரின் இளமை கால வேடத்தில் நடித்தார் கேப்ரியல்லா செல்லஸ்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியலின் கதாநாயகியாக கேப்ரியல்லா நடித்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங் படி, நல்லபடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிக்கும் சீரியல்களில் ஒன்றாகவும் ‘சுந்தரி’ உள்ளது. இதற்கிடையில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இண்டிபென்டென்ட் ஆல்பம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கேப்ரியல்லாவிற்கு கிடைத்தது. ரஹ்மானின் இந்த ஆல்பத்திற்கு “மூப்பில்லா தமிழே தாயே” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உடனே “மூப்பில்லா தமிழே தாயே” ஆல்பத்தில் கேப்ரில்லா செல்லஸ் நடித்து உள்ளார் என்று நினைத்து விட வேண்டாம். மாறாக பாடல் பாடியுள்ளார். ஆம்! “மூப்பில்லா தமிழே தாயே” ஆல்பத்தில் ஏ.ஆர். ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் படி உள்ளனர். அதில் கேப்ரில்லாவும் ஒருவர்.

இதுகுறித்து முன்னதாக கேப்ரியல்லா செல்லஸ், ஆஸ்கார் நாயகனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து “நான் கனவில் கூட நினைத்து பார்க்காத நிஜம் நடந்தது” என்று மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்தார். “இது எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு.. இறைவனுக்கு நன்றி!” என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அடுத்த வாரம் தற்காலிக அமைச்சரவை

Next Post

ஆட்சியமைக்க யாரும் முன்வராததால் ஆட்சியை நாம் தொடர்கிறோம் | கெஹெலிய ரம்புக்வெல்ல விசேட செவ்வி

Next Post
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

ஆட்சியமைக்க யாரும் முன்வராததால் ஆட்சியை நாம் தொடர்கிறோம் | கெஹெலிய ரம்புக்வெல்ல விசேட செவ்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures