‘நடனப்புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
‘வால்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகும் புதிய படம் ‘ரேக்ளா’. எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
நடனப்புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.
படத்தில் இடம்பெறும் ஏனைய நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பிற்கான தொடக்கவிழாவில் தயாரிப்பாளர்கள் கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மிஷ்கின், மனோஜ், தாஸ் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]