Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாணவியை கொடூரமாகக் கொன்ற கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

March 10, 2022
in News, Sri Lanka News
0
மாணவியை கொடூரமாகக் கொன்ற கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தர்மராஜா நித்தியா என்ற மாணவியின் கொடூர கொலையைக் கண்டித்து கொலையாளிக்கு கடும் தண்டனையை வழங்கக் கோரியும், மக்கள் விடுதலை முன்னணியின் கீழ் இயங்கும் ஆசிரிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டப் பேரணி ஹாலி-எல நகரில் இன்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி இடம்பெற்றது.

உடுவரை பெருந்தோட்ட (நேப்பியர்) கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய தர்மராஜா நித்தியா என்ற மாணவியின் கோரக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர், பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் நேற்று மாலை ஆஜர் செய்யப்பட்டார்.

நீதிபதி சமிந்த கருணாதாச, சந்தேக நபரை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், தொடர்ந்து புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஹாலி-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவன் குணதிலக்கவிற்கு உத்தரவிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை  பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தர்மராஜா நித்தியா, கோடரியினால் தாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து கொலைச் சந்தேக நபராக இனம் காணப்பட்ட இராமையா திபாகரன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தார்.

இந் நபரைக் கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதையடுத்து உடுவரை ரயில் நிலையத்திற்கு பின்புறமாக பதுங்கியிருந்த கொலைச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், தனது காதலுக்கு சாதகமான பதில் வழங்காமல், தன்னை நித்தியா ஏமாற்றியதால், ஆத்திரம் கொண்ட நான் கோடரியினால் தாக்கி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் இந்நபரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், ஹாலிஎலைப் பொலிசார் குறித்த  சந்தேக நபரை பதுளை மஜிஸ்திரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்திருந்தனர்.

சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை, விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட 09 பெண்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

Next Post

ஆண் குழந்தைக்கு ஆசை | பிறந்து 7 நாட்கள் பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை

Next Post
ஆண் குழந்தைக்கு ஆசை | பிறந்து 7 நாட்கள் பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை

ஆண் குழந்தைக்கு ஆசை | பிறந்து 7 நாட்கள் பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures