Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இருதய ரத்த நாளங்களை கொரோனா வைரஸ் சேதப்படுத்தும்- புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

February 24, 2022
in News, Sri Lanka News
0
ஒமிக்ரோனையடுத்து புதிய கொவிட் மாறுபாடு பிரான்ஸில் கண்டறியப்பட்டது

இருதய ரத்த நாளங்களை கொரோனா வைரஸ் எப்படியெல்லாம் தாக்கும் என்பது தொடர்பான புதிய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. ஆனாலும், புதிய வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட வகைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இருதய ரத்த நாளங்களை கொரோனா வைரஸ் எப்படியெல்லாம் தாக்கும் என்பது தொடர்பான புதிய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது.

இருதய ரத்த நாளங்களை கொரோனா வைரஸ் சேதப்படுத்தும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் கிருமி உடலின் பல பகுதிகளை தாக்குகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது கொரோனா வைரஸ் நேரடியாக இருதய ரத்த நாளங்களை தாக்குவது இல்லை என்று தெரியவந்தது. ஆனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக சைட்டோ டாக்சிக் டிபன்ஸ் என்ற பாதுகாப்பு அமைப்பு அதிகரித்து இருதய ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இருதய ரத்த நாளங்களில் தொற்று பாதிப்பு ஏற்படாமலேயே சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொரோனா வைரஸ் கிருமிக்கு இருக்கிறது.

நோய் எதிர்ப்பு செல்களில் இருந்து கிருமியை அழிக்க சைட்டோ டாக்சிக் செல்கள் உருவாகின்றன. கொரோனா தொற்றின் போது இதன் அளவு அதிகரிக்கிறது. இதுதான் இருதய ரத்தநாள திசுக்களை தாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

BREAKING | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Next Post

5 ரஷ்ய விமானங்கள், 1 ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேன் தகவல்

Next Post
5 ரஷ்ய விமானங்கள், 1 ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேன் தகவல்

5 ரஷ்ய விமானங்கள், 1 ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேன் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures