Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

8 நாடுகள் பங்குபற்றும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மார்ச்சில் ஆரம்பம்

February 10, 2022
in News, Sports
0
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல்  ஆரம்பம்

எட்டு நாடுகள் பங்குபற்றும் மகளிர் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி மார்ச் 4 ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.

கடந்த வருடம் நடைபெற இருந்த இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கொவிட் – 19 தொற்று காரணமாக இந்த வருடத்துக்கு பிற்போடப்பட்டது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான கால அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை புதன்கிழமை (09) வெளியிட்டது.

இதற்கு அமைய டவ்ரங்கா, பே ஓவல் விளையாட்டரங்கில் மார்ச் 4ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடானா நியூஸிலாந்தை மேற்கிந்தியத் தீவுகள்  எதர்த்தாடவுள்ளது.

பரம வைரிகள் மோதும் மிக முக்கிய 2 போட்டிகள் அடுத்த இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளன.

நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி ஹெமில்டன் செடன் பார்க் அரங்கில் மார்ச் 5ஆம் திகதியும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி டவ்ரங்கா, பே ஓவல் மைதானத்தில் மார்ச் 6ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

மார்ச் 4ஆம் திகதி முதல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள ஏப்ரல் 3ஆம் தேதி வரை 31 தினங்கள் நீடிக்கும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மொத்தம் 31 போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டிகள்  ஆக்லண்ட், கிறைஸ்ட்சேர்ச், டனேடின், ஹெமில்டன், டவ்ரங்கா, வெலிங்டன் ஆகிய மைதானங்களில்  நடைபெறும்.

ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப் 2017-2020 போட்டி முடிவுகளின் பிரகாரம் தரவரிசையில் முதல் 4 இடங்களைப் பிடித்த அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் நேரடியாக மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றன. வரவேற்பு நாடானான நியூஸிலாந்தும் நேரடி தகுதியைப் பெற்றுக்கொண்டது.

இலங்கையிலிருந்து இடம் மாற்றப்பட்டு ஸிம்பாப்வேயில் நடைபெறவிருந்த 2021 மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி கொவிட் காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்டது.

இதன் காரணமாக மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 6, 7, 8ஆம் இடங்களிலிருந்த பங்களாதேஷ், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றன.

இந்த எட்டு நாடுகளும் லீக் சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பெறும் நாடுகள் அரை இறுதிகளில் விளையாட தகதிபெறும்.

முதலாவது அரை இறுதிப் போட்டி வெலிங்டன், பேசின் ரிசேர்வ் மைதானத்தில் மார்ச் 30ஆம் திகதியும் 2ஆவது அரை இறுதிப் போட்டி மார்ச் 31ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஏப்ரல் 3ஆம் திகதியும் நடைபெறும். இந்த 2 போட்டிகளும் கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும்.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியானது கொவிட் – 19 யுகத்தில் நடைபெறும் இரண்டாவது மகளிர் உலக கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியாகும்.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் 2020 மார்ச் மாதம் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டிருந்தது. இறுதிப் போட்டியில் இந்தியாவை இலகுவாக வெற்றிகொண்டு அவுஸ்திரேலியா இருபது 20 உலக சம்பியனாகி இருந்தது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Next Post

குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

Next Post
குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures