Monday, May 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இங்கிலாந்தை வீழ்த்தி 5 ஆவது தடவையாகவும் இளையோர் உலக கிண்ணத்தை கைப்பற்றி இந்தியா சாதனை!

February 6, 2022
in News, Sports
0
இங்கிலாந்தை வீழ்த்தி 5 ஆவது தடவையாகவும் இளையோர் உலக கிண்ணத்தை கைப்பற்றி இந்தியா சாதனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சனிக்கிழமையன்று ஆன்டிகுவாவின் நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஐ.சி.சி.யின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்தியா 5 ஆவது  முறையாகவும் சம்பியன் பட்டம் வென்றது.

Image

190 என்ற இலகுவான வெற்றியிலக்கினை துரத்திய யாஷ் துல் தலைமையிலான இந்திய இளையோர் அணி நான்கு விக்கெட்டுகள் மற்றும் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியிலக்கினை கடந்தது.

இந்திய அணியின் சகலதுறை வீரர் ராஜ் பாவா ஒரு வரலாற்று சிறப்புமிக்க 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் அணியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பினை செய்தது மாத்திரமல்லாது, போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வானார்.

துடுப்பாட்டத்திலும் அவர் 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14 ஆவது ‍இளையோர் உலக கிண்ண கிரிக்கெட் தெடரின் இறுதிப்போட்டி ஆன்டிகுவாவின் நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிகழமை நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, இந்தியாவின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து பறிகொடுத்தது.

இதனால் 61 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தத்தளித்தது.

பின்னர் இந்திய வீரர்கள் ராஜ் பவா, ரவி குமாரின் பந்து வீச்சில் தடுமாறிய இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்து 189 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ரிவ் 116 பந்தில் 95 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ராஜ் பவா 5 விக்கெட்களையும், மற்றொரு பந்து வீச்சாளர் ரவி குமார் 4 விக்கெட்களையும் மற்றும் கௌஷல் தம்பே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பின்னர் 190 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அணித் தலைவர் யாஷ் துல் 17 ஓட்டங்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

எனினும் இந்திய வீரர்கள் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, ராஜ்பாவா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதில் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகியோர் அரைச்சதம் அடித்தனர். ராஜ்பாவா 35 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை பெற்று  நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த இந்தியா, ஐந்தாவது முறையாக இளையோர் உலக கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

Image

இதற்கு முன்னர் 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் 19 வயதுக்குட்ட இந்திய இளையோர் அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

புத்தகக் கடை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | செ.சுதர்சன்

Next Post

ஜெனிவாவை இலக்காக கொண்டு செயற்படவில்லை | நீதி அமைச்சர் அலிசப்ரி கேள்வி

Next Post
அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிப்பு – நீதி அமைச்சர்

ஜெனிவாவை இலக்காக கொண்டு செயற்படவில்லை | நீதி அமைச்சர் அலிசப்ரி கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025

Recent News

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures