Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி கோட்டாபயவால் எப்போது நாடாளுமன்றம் கலைக்கப்படும்? | தெற்கு ஊடகம் தகவல்

January 22, 2022
in News, Sri Lanka News
0
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்த விசேட செயலமர்வு

20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஓராண்டு காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 மார்ச் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடாத்தப்பட உள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் பொதுஜன முன்னணியிடம் இருக்கும் போதே தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய மாகாணசபைத் தேர்தலையும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தேர்தல்கள் அடுத்தடுத்து நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டி நடாத்தப்படாது எனவும் 2024ம் ஆண்டில் நடாத்தப்படும் எனவும் அரசாங்கத் தகவல்களை மேற்கோள் காட்டி குறித்த தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இங்கிலாந்தில் புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு?

Next Post

பிளாஸ்ற்றிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பரிதாபப் பலி – மட்டக்களப்பில் சம்பவம்

Next Post
குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்த தாய்

பிளாஸ்ற்றிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பரிதாபப் பலி - மட்டக்களப்பில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures