நாகசைதன்யா – சமந்தா
கசப்பு ஏற்பட்ட பின்னும் கண்துடைப்பிற்காக ஒரே வீட்டில் எத்தனை காலம் யாருக்கும் தெரியாமல், மற்றவர்களுக்காக ஒன்றாக இருப்பது போல நடித்துக்கொண்டே பிரிந்தே கிடப்பது??!
பிரிந்தவர்களின் பின்னால் ஆயிரம் காரணங்கள் இருக்கும். அல்லது உப்புச் சப்பற்ற ஒரே ஒரு காரணம் கூட இருக்கும்.
அந்தக் காரணம் நமக்கு அவசியம் இல்லை. பிரியலாம் என்ற அவர்களின் எண்ணமும், முடிவும் மட்டுமே நம்மால் மதிக்கப்பட வேண்டியது.
பல விவாகரத்துகளில் குசு விடுதல், வாய் நாறுதல், குறட்டை விடுதல் கூட காரணமாக சொல்லப்பட்டிருக்கு.
பிரிதலுக்கு காரணமாக எது என்ன மண்ணாங்கட்டியாக இருந்தால் நமக்கென்ன??!
அதைப் பேச நமக்கென்ன அவசியம்??!
காதலைப் போற்றுதல் போல… பிரிதலையும் போற்றுங்கள் எனச் சொல்ல வரவில்லை.
ஒருத்தருக்கொருவர் புரிந்துகொண்டு எடுக்கும் அனைத்து பரஸ்பர முடிவையும் மதியுங்கள்,
அதை வெவ்வேறு காரணமாகக் கதைகட்டி கொச்சைப் படுத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.
ஒருவரைக் கொச்சைப்படுத்த ஆரம்பிக்கும் முன் உங்கள் மனைவியிடம் உங்கள் உறவும், காதலும் எப்படிப் பட்டதாக இருக்கிறது என மனதிற்குள் ஒருமுறை படமோட்டிக்கொள்ளுங்கள்.
நாளை மகனோ, மகளோ பிடிக்கவில்லை… பிரிகிறோம் என்றால் காதுகொடுங்கள்.
அய்யய்யோ அவன் என்ன நினைப்பான்? இவன் என்ன நினைப்பான்? எனக் கதறாதீர்கள்.
பிரிதல்தான் கட்டப்பட்ட சிறகுகளுக்குத் தரப்படும் விடுதலை என அவர்கள் உணர்ந்தால் அக்கயிற்றை அறுக்க உதவுங்கள்.
மேலும் ஒரு வடத்தைச் சுற்றி இறுக்கக் கட்டி வைக்காதீர்கள். அப்படி செய்வதால்தான் பல வாழ்க்கைகள் தற்சாவில் முடிகின்றன.
“பிரிந்து பறக்கும் வானத்தில் சுதந்திரம் உண்டென்றால், அதை அவர்களுக்கு வலியின்றி பரிசளியுங்கள்.”
காலத்தினால் சிலர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆறுதலாக இருங்கள். அவர்களை வார்த்தைகளால் இட்டுக்கட்டி அசிங்கப்படுத்தாதீர்கள்.
தம்பதிகளின் பிரிவை ஒரு தகவலாக மட்டும் கடத்திவிட்டு அமைதியாகுங்கள் நண்பர்களே.
தனுஷும்- ஐஸ்வர்யாவும் மேற்கொள்ள இருக்கும் தங்கள் வாழ்க்கையின் அடுத்த தேடலுக்கும் புதிய தொடக்கங்களுக்கும் எனது வாழ்த்துகள்!
காயங்கள் ஆறட்டும்.
அன்பும், நேசமும் நண்பர்களே!” – என்று ஏ.ஜான் பதிவிட்டு உள்ளார்.
(முகப்பு படம்: தனுேஷ் – ஐஸ்வர்யா)
#No 1 TamilWebSite

