Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியை சந்தித்தார் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

January 10, 2022
in News, Sri Lanka News
0
ஜனாதிபதியை சந்தித்தார் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருட இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ க்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சந்திப்பின் போது சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை வரவேற்ற ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நெருக்கமான உறவுகளை நினைவு கூர்ந்தார்.

கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுக்கும் வகையில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட பொருள் மற்றும் நிதி உதவிகளுக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் சீன மக்களுக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது நன்றியினை  தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காக இலங்கைக்கு சைனோஃபார்ம் தடுப்பூசிகளை வழங்குவதில் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்காகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ நன்றியை தெரிவித்தார்.

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை திறக்கப்பட்டுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை உயிர் குமிழிக்குள் வைத்து அவர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி வாங் யீயிடம் கோரிக்கை விடுத்தார்.

கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக கடனை திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்கும் திறன் குறித்து கவனம் செலுத்த முடிந்தால் அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சலுகை வர்த்தகக் கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள முடிந்தால், தொழில்துறையை சீராக நடத்த முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சீனாவுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த வாங் யீ, எதிர்வரும் காலங்களில் இது நிகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சீன தூதர் QI Zhenhong, வர்த்தக துணை அமைச்சர் QIAN Keming, உதவி வெளியுறவு அமைச்சர் WU Jianghao, சீன சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு அமைப்பின் துணை இயக்குனர் HZHANG Maoyu, வெளியுறவு அமைச்சர் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு | திரைவிமர்சனம்

Next Post

வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

Next Post
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

வெள்ளவத்தை - பம்பலப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures