Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்தின் தோல்விக்கு இதுவே காரணமாம் | கோட்டாபய சொல்லும் கதை

January 8, 2022
in News, Sri Lanka News
0
கோத்தபாயவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியா?

அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பாகும்.

குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் தொடர்பில் ஜனாதிபதி மேலும் பல கருத்துக்களை வெளியிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்து அரசாங்கம் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது தொடர்பில் அதிருப்தி தெரிவித்த ஜனாதிபதி, உரிய அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் தவறியமையே அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறானவர்களை அரசாங்கத்தில் இருந்து நீக்குவதே பொருத்தமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போது பலர் அமைச்சுப் பதவிகளை நாடி வருவதாகவும், அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

வேலை செய்ய விரும்புபவர்கள் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தப் பணியைச் செய்யலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அரசின் சம்பள அதிகரிப்பு ஒரு கையால் கொடுத்து மறு கையால் வாங்குவதை போன்றது

Next Post

இலங்கைத் தமிழர்கள் மீது தனிப்பாசம் உண்டு | பாடகர் ஸ்ரீநிவாஸ்

Next Post
இலங்கைத் தமிழர்கள் மீது தனிப்பாசம் உண்டு | பாடகர் ஸ்ரீநிவாஸ்

இலங்கைத் தமிழர்கள் மீது தனிப்பாசம் உண்டு | பாடகர் ஸ்ரீநிவாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures