Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மத்திய ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி

December 27, 2021
in News, Sri Lanka News
0
மத்திய ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி

பங்களாதேஷ், மிர்பூர் உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியில் மகளிர் பிரிவில் இலங்கை அணி 3 ஆம், 4ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியின் ஆரம்பப் போட்டியில் முற்றிலும் எதிர்பாராதவிதமாக நேபாளத்திடம் 2 – 3 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்த இலங்கை, அடுத்த 3 போட்டிகளில் கிர்கிஸ்தான், மாலைதீவுகள், பங்களாதேஷ் ஆகியவற்றை தலா 3 நேர் செட்களில் வெற்றிகொண்டிருந்தது.

எனினும் இன்று முற்பகல் நடைபெற்ற கடைசிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானிடம் 2 – 3 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இலங்கை இழந்தது.

உஸ்பெகிஸ்தானுடனான இன்றைய போட்டியில் முதலாவது செட்டில் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை, சமநிலை முறிப்பு முறையில் 26 – 24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

2ஆவது செட்டில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை 25 – 18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று 2 – 0 என்ற செட்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஆனால், அடுத்த 3 செட்களிலும் ஏகப்பட்ட தவறுகளை இழைத்ததால் இலங்கை தொல்வியைத் தழுவியது.

3ஆவது செட்டில் கடும் சவால் விடுத்து விளையாடிய இலங்கைக்கு வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இருந்தபோதிலும் தவறுகள் இழைத்ததால் 20 – 25 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து 4ஆவது செட்டில் நுட்பத்திறனுடன் விளையாடிய உஸ்பெகிஸ்தான் 25 – 19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று செட்கள் நிலையை 2 – 2 என சமப்படுத்தியது.

தீர்மானமிக்க கடைசி செட்டில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டபோதிலும் கடைசிக் கட்டத்தில் இலங்கை அணியின் தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட உஸ்பெகிஸ்தான் 15 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஆண்கள் பிரிவில் பங்குபற்றும் இலங்கை தனது முதல் 3 போட்டிகளில் உஸ்பெகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய அணிகளை வெற்றிகொண்டு நாளைய இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் மாலைதீவுகளை இன்று மாலை எதிர்த்தாடவுள்ளது.

 

Previous Post

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வசூலை எட்டிய ஸ்பைடர் மேனின் புதிய பதிப்பு

Next Post

போலி நாணயத்தாள் குறித்து எச்சரிக்கை அவசியம் – மத்திய வங்கி

Next Post
போலி நாணயத்தாள் குறித்து எச்சரிக்கை அவசியம் – மத்திய வங்கி

போலி நாணயத்தாள் குறித்து எச்சரிக்கை அவசியம் - மத்திய வங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures