Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையின் யோசனையை நிராகரித்த இந்தியா!

December 27, 2021
in News, Sri Lanka News
0
இலங்கையின் யோசனையை நிராகரித்த இந்தியா!

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை முகாமைப்படுத்துவதற்காக துணை நிறுவனமொன்றை அமைக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அமைச்சர் உதய கம்மன்பில பணிப்புரை விடுத்துள்ளார்.

முதலில் இந்த நிறுவனத்தை உருவாக்கி அதன் பின்னர் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தமக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய நிறுவனத்திற்கு “டிரின்கோ பெட்ரோலியம் டேர்மினல் லிமிடெட் ” என்று பெயரிடப்படவுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனத்துடன்(ஐஓசி) யுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் நிலையிலேயே புதிய நிறுவன அமைப்பு பற்றி செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை சீனன்குடாவில் உள்ள லோவர் டேங்க் பண்ணையில் இருந்து 14 எண்ணெய் தொட்டிகளை இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கும் (ஐஓசி), 24 மேல் பண்ணையில் உள்ள 24 தொட்டிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவும், மீதமுள்ள 61 தொட்டிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திச்செல்வதற்கான இலங்கையின் யோசனையை இந்திய எண்ணெய் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கொழும்பின் ஊடகம ஒன்று தெரிவித்துள்ளது.

இதில் கூட்டு உடன்படிக்கையின் கீழ் வரும் பண்ணைகளில் 51வீதத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், 49 வீத பங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் கொண்டிருக்கும்.

அதேநேரம் இந்திய நிறுவனத்துக்கான 14 தாங்கிகளும் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படும் என்று யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை, தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் ஒரு சந்திப்பை நடத்தி, சீனக்குடா எண்ணெய் தொட்டி பண்ணை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்தார். எனினும் ஜே.வி.பி.யுடன் இணைந்த பெற்றோலிய பொதுத் தொழிலாளர் சங்கம் உட்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக ஆட்சேபித்துள்ளன.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நாட்டை மீட்க இராணுவ ஆட்சி வேண்டும்! – ஞானசார தேரர் வலியுறுத்து

Next Post

பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

Next Post
பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures