Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசுக்கு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

December 24, 2021
in News, Sri Lanka News
0
‘போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்’: இலங்கை ஆசிரியர் சங்கம்

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக அரசு வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (23) ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசு வாக்குறுதி அளித்த முறைமைக்கு அமைவாக எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அதிபர் – ஆசிரியர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை சம்பளத்துடன் இணைக்காவிட்டால் பாரிய தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசு அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 3 கோடி ரூபாவை ஒதுக்கியது.

எனினும், அதற்கான சுற்றுநிருபம் இதுவரை வெளியிடப்படவில்லை. இவ்விடயத்தில் எமக்குப் பாரிய சந்தேகம் உள்ளது.

இது தொடர்பில், கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வந்தாலும் இதுவரை ஒரு தீர்க்கமானம் வழங்கப்படவில்லை.

அமைச்சரவை உபகுழுவால் அனுமதிக்கப்பட்டு அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலுவைக் கொடுப்பனவையே நாம் கோருகின்றோம்.

நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றது. மத்திய மாகாணத்தில் மட்டும் 2 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

‘‘விடுதலைப்புலிகளின் காலத்தில் அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில்லை’’

Next Post

குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் மறுகனமே அமைச்சு பதவியை துறப்பேன் – கெஹெலிய

Next Post
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் மறுகனமே அமைச்சு பதவியை துறப்பேன் - கெஹெலிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures