Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எண்ணெய் விலையும் உயர்ந்தது | தற்காலிகம்தான் என்கிறார் அமைச்சர்

December 22, 2021
in News, Sri Lanka News
0
எண்ணெய் விலையும் உயர்ந்தது | தற்காலிகம்தான் என்கிறார் அமைச்சர்

இந்த எண்ணெய் விலை உயர்வு தற்காலிகமானது எனத் தெரிவித்த நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எதிர்காலத்தில், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கும் போது, மீண்டும் எண்ணெய் விலையை குறைப்போம் என்றும் கூறினார்.

அதிவேக நெடுஞ்சாலை  வெளியேறும் வாயிலில்  Lanka QR நடமாடும் செலுத்தல் செயலியை  பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும்  நிகழ்வு  இன்று 21-12-2021 கொட்டாவ  இடைபரிமாற்ற மத்திய நிலையத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

நேற்றிரவு முதல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நிலையிலும் கடந்த காலமாக எண்ணெய் விலையை உயர்த்தப்படவில்லை. இந்த எண்ணெய் விலை உயர்வு தற்காலிகமானது. எதிர்காலத்தில், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கும் போது, மீண்டும் எண்ணெய் விலையை குறைப்போம். உலகளாவிய தொற்றுநோயுடன் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியால் நாம் வெவ்வேறு முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

எண்ணெய் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி மீண்டும் வரும்போது, நாடும் அதன் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால்தான் முதலில் மக்களின் உயிரைக் காத்தோம். எண்ணெயால் ஏற்படும் நஷ்டத்தை மக்களுக்கு வழங்காவிட்டால், அந்த இழப்பை அரசே ஏற்க வேண்டும். அந்த இழப்பை ஈடுகட்ட மக்கள் மீது அரசு வரி விதிக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் வரிச் சுமையை மக்கள்தான் சுமக்க வேண்டும். கட்டி அடித்தாலும் அடித்துக் கட்டினாலும் இரண்டும் ஒன்றுதான்.   எனவே இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

அனுர திஸாநாயக்க  தான் கடந்த காலத்தில் பிசாசுகளை உருவாக்கி மீண்டும் இந்த நாட்டை பின்னோக்கி தள்ளினார்.   பிரபாகரன் வடக்கில் பயங்கரவாதத்தை செயல்படுத்தி இந்த நாட்டை பின்தள்ள வைத்தார்.   தெற்கில் இருந்த பயங்கரவாதிகள் இணைந்தும் அதனை தான் செய்தார்கள். தமது கடந்த காலத்தை மறந்து தற்போது இந்த நாட்டில் நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றனர்.

சந்தை நெருக்கடிகளை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  அவர்கள் இந்த நாட்டை கட்டியெழுப்ப எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எமது முயற்சிகளுக்கு அவர் உறுதுணையாகவும் இருக்க வேண்டும். அவர் தடுப்பூசி வழங்குவதை  ஆதரிக்கவில்லை.

ஆனால் ரகசியமாகச் சென்று தடுப்பூசி போட்டார். அநுர திஸாநாயக்க தனது ஆதரவாளர்களுக்கு தடுப்பூசி போடுமாறு கூறவில்லை. அப்படியானால் அவரிடம் எப்படி ஆதரவை எதிர்பார்ப்பது? நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தி தனது கட்சி நிதியை பலப்படுத்த முயற்சிக்கிறார். தான் மாத்திரம் அரசியலால் வாழ்ந்தால் போதும் என்று அநுர திஸாநாயக்க நினைக்கிறார் என்றும் அமைச்சர் கூறினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகும் போது முழு நாட்டையும் சீனா கையகப்படுத்தும்

Next Post

முறிகண்டி பிள்ளையாரை வணங்கினால் ஏ- 9 வீதியில் விபத்துகள் குறையும்

Next Post
முறிகண்டி பிள்ளையாரை வணங்கினால் ஏ- 9 வீதியில் விபத்துகள் குறையும்

முறிகண்டி பிள்ளையாரை வணங்கினால் ஏ- 9 வீதியில் விபத்துகள் குறையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures