Monday, May 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வாழ்வையே கவிதையாக வடித்த மகாகவி பாரதியாரின் பிறந்த நாள், இன்று

December 11, 2021
in News, இந்தியா
0
வாழ்வையே கவிதையாக வடித்த மகாகவி பாரதியாரின் பிறந்த நாள், இன்று
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழின் பெருமையை தரணிக்கு எடுத்துரைத்தார்.

கவிதை எழுதுபவர் கவிஞரல்ல; கவிதையை வாழ்க்கையாக உடையவர் மற்றும் வாழ்க்கையையே கவிதையாகப் படைப்பவரே கவிஞர் என கவிக்கு இலக்கணம் சொன்ன மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணியன், 7 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். 11 வயதில் எட்டயபுர சமஸ்தானத்தில் தன் புலமையை நிரூபித்த சுப்ரமணியனை, பாரதி என பட்டமளித்துப் பாராட்டினார் எட்டயபுர மன்னர்.

1897 ஆம் ஆண்டு பதினான்கரை வயதான பாரதிக்கு 7 வயதான செல்லம்மாவுடன் திருமணம் நடைபெற்றது. 16 வயதில் தன் தந்தையை இழந்த பாரதி 1898 ஆம் ஆண்டு காசிக்குச் சென்றார். அங்கு ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்த அவர், யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழின் பெருமையை தரணிக்கு எடுத்துரைத்தார்.

காசியில் வசித்த போதுதான், முறுக்கு மீசை, முண்டாசு என அவரது தோற்றம் மாறியது. பின்னர் எட்டயபுரத்திற்கு திரும்பிய பாரதி, அரசவையில் இரு ஆண்டுகள் பணியாற்றினார். 1904-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த பாரதி, சுதேச மித்திரன், சக்ரவர்த்தினி பத்திரிகைகளில் பணியாற்றினார். விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை சந்தித்த பின்னர் பெண்ணுரிமை பற்றிய அவரது சிந்தனை மேலோங்க, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என முழங்கினார்.

1906-ஆம் ஆண்டு இந்தியா பத்திரிகைக்குப் பொறுப்பாசிரியரானார் பாரதி. அவரது எழுத்துகளும், கேலிச்சித்திரங்களும் பிரிட்டிஷாருக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்தன. ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என பாரதி எழுதிய பாடல்கள் மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டின. இதனால், இந்தியா பத்திரிகைக்கு ஆங்கிலேய அரசு கடும் நெருக்கடியை ஏற்படுத்த, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவைக்கு இடம் பெயர்ந்தார் பாரதி.

புதுவையில் இருந்த காலகட்டத்தில் தான் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்களைப் படைத்தார் பாரதி. 1918 ஆம் ஆண்டு புதுவையில் இருந்து வெளியே வந்த பாரதியை ஆங்கிலேய அரசு கைது செய்தது. 34 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் தன் மனைவியின் ஊரான கடையத்திற்கு சென்றார் பாரதி.

கடையத்தில் வசித்தபோது வறுமையில் சிக்கிய பாரதி, தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என தன் நிலையையும் கவிதையில் வடித்தார். 1919 ஆம் ஆண்டு சென்னை திரும்பிய பாரதி திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்ட பாரதி உடல்நலம் குன்றினார். தனது 39 வயது வரை வாழ்ந்த பாரதி 1921 செப்டம்பர் 11 அன்று வரலாறாக மாறினார்


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பிரியந்த குமாரவை பாதுகாக்க போராடிய பாகிஸ்தான் பிரஜை மாலிக்கை பாராளுமன்றத்திற்கு அழைக்க வேண்டும் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Next Post

சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை

Next Post
சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை

சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025

Recent News

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures