Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கார்த்திகைத் தீபத்திருநாளில் தீபம் ஏற்றுபவர்களை விசாரிப்பது தான் நல்லிணக்கமா? | அம்பிகா

November 20, 2021
in News, Sri Lanka News
0
கார்த்திகைத் தீபத்திருநாளில் தீபம் ஏற்றுபவர்களை விசாரிப்பது தான்  நல்லிணக்கமா? |  அம்பிகா

கார்த்திகைத்தீபத்திருநாளன்று தீபங்களை ஏற்றியவர்களிடம் கடந்த வருடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதே சம்பவம் இவ்வருடமும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

வடக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கபபடுகின்றது என்று விசனம் வெளியிட்டுள்ள சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன், ‘அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கம் இதுதானா?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை கொள்ளமுடியாது - அம்பிகா சற்குணநாதன் |  Virakesari.lk

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கார்த்திகைத் தீபத்திருநாளை முன்னிட்டு மக்கள் தீபங்களை ஏற்றிக்கொண்டாடிய வேளையில், மாவட்டத்தின் சில இடங்களில் அதனைக் குழப்பும் இராணுவத்தினர் செயற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று போரில் உயிரிழந்த உறவுகளின் நினைவிடங்களுக்குச் சென்று விளக்கேற்றி அவர்களை நினைவுகூருதல் பலவருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில், அண்மைக்காலத்தில் அதற்குத் தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் கார்த்திகைத்தீபத்திருநாளை முன்னிட்டு தீபங்கள் ஏற்றப்பட்டதால் குழப்பமடைந்த இராணுவத்தினர், தீபம் ஏற்றப்பட்டிருந்த சில வீடுகளுக்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வீரகேசரியில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன்,

‘கடந்த வருடமும் கார்த்திகைத்தீபத்திருநாளன்று தீபங்களை ஏற்றியவர்களிடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதே சம்பவம் இவ்வருடமும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. வடக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றது’ என்று விசனம் வெளியிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி ‘இதுதான் அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கமா?’ என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரது பதிவை மேற்கோள்காட்டி மீள்பதிவொன்றைச்செய்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் ஜி.காசிலிங்கம், குறித்த செய்தியைக் களத்திலிருந்து எழுதிய ஊடகவியலாளருடன் தான் பேசியதாகவும் அம்பிகா சற்குணநாதனால் கூறப்படுவதைப்போன்று யாரும் ‘துன்புறுத்தப்படவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.

அப்பகுதிக்குப் பொலிஸார் சென்றதுடன் அங்கு நடைபெறும் விடயங்கள் தொடர்பில் மக்களிடம் விசாரித்ததாகவும் அதற்கு மக்கள் ‘இது இந்துக்களின் பண்டிகை’ என்று விளக்கமளித்ததாகவும் அதன்பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரிய தெளிவுபடுத்தலைப் பெற்றுக்கொள்வதாகவும் பிரதமரின் ஒருங்கிணைப்புச்செயலாளர் அவரது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பின்னூட்டப்பகுதியின் ஊடாகப் பதிலளித்த அம்பிகா சற்குணநாதன், ‘வீரகேசரியில் வெளியான செய்தியை மேற்கோள் காண்பித்து நான் எனது பதிவைச் செய்திருக்கின்றேன். அதுமாத்திரமன்றி அங்குள்ள மக்கள் ‘விசாரிக்கப்பட்டதாகவே’ நான் எனது பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேனே தவிர, ‘துன்புறுத்தப்பட்டதாகக்’ கூறவில்லை.

மேலும் அப்பகுதியில் வாழும் நபர்களிடம் கேட்டுத்தெளிவுபடுத்திக்கொண்டதற்கு அமைய, இராணுவத்தினரே மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். எனவே உண்மையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை அல்லவா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள காசிலிங்கம், ‘பொலிஸார் தமது கடமைகளை முன்னெடுப்பதில் எந்தவொரு சிக்கலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இருப்பினும் அங்குள்ள மக்கள் விசாரிக்கப்பட்டதாக நீங்கள் கூறுவதனால் இதுகுறித்து ஆராய்கின்றேன். எது எவ்வாறெனினும் உங்களுக்குத் தகவல்களை வழங்கியவர்கள் உங்களது கட்சி ஆதரவாளர்கள் அல்ல என்று நம்புகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனை மறுத்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், தான் எந்தவொரு அரசியல் கட்சியினதும் உறுப்பினர் அல்ல என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சந்தஹிரு சேய தாது கோபுர நிர்மாணம் தமிழர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தும் – அகலகட சிறிசுமண தேரர்

Next Post

லேமல்லர் இக்தியோஸிஸ் என்ற தோல் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Next Post
லேமல்லர் இக்தியோஸிஸ் என்ற தோல் பாதிப்பிற்குரிய சிகிச்சை

லேமல்லர் இக்தியோஸிஸ் என்ற தோல் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures