ஆபிரிக்காவில் சனத்தொகை அதிகமுள்ள நாடான நைஜீரியாவின் சொகோட்டோ மாகாணத்தில், ஆயுதம் ஏந்திய நபா்களால் 15 போ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
இதில் மேற்கு ஆபிரிக்க நாடான நைஜா் எல்லையையொட்டி அமைந்துள்ள இல்லெலா நகரில் 13 பேரும், கோரன்யோ நகரில் 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
நைஜீரியாவில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் அண்மையில் 30 போ் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் சொகோட்டோ மாகாணத்தில் ஆயுதம் ஏந்திய நபா்கள் புகுந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக ஆளுநா் அமினு டம்புவல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
நைஜீரியாவின் வடமேற்கு மத்திய மாகாணங்களில் நடைபெற்று வரும் வன்முறைக்கு நிகழாண்டில் நூற்றுக்கணக்கானோா் பலியாகியிருக்கின்றனா்.
இதில் போதிய பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடா்பு வசதிகளற்ற கோரன்யோ இன மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனா். இங்கு கடந்த மாதம் சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 போ் கொல்லப்பட்டனா்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]