கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில் உகண்டா இராணுவ வீரர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவில் ஆபிரிக்க ஒன்றிய படையினருடன் பணியாற்றிய ஐந்து உகாண்டா வீரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கு ஏழு பொதுமக்களை கொலை செய்ததாக கண்டறியப்பட்டனர்.
இந்த இராணுவ வீரர்களில் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் மூவருக்கு 39 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூவரும் உகாண்டாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள், அங்கு அவர்களது சிறைத் தண்டனையை அனுபவிப்பார்கள்.
சோமாலியாவில் ஆபிரிக்க ஒன்றியத்தின் படை கடந்த 14 ஆண்டுகளாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]