Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிடி நழுவல், ஆஸி.யுடனான தோல்விக்கு பின் முதன்முறையாக வாய் திறந்தார் ஹசன் அலி

November 14, 2021
in News, Sports
0
பிடி நழுவல், ஆஸி.யுடனான தோல்விக்கு பின் முதன்முறையாக வாய் திறந்தார் ஹசன் அலி

நடப்பு டி-20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியுடானான தோல்வி மற்றும் முக்கிய பிடியெடுப்பு வாய்ப்பினை நழுவவிட்டதனால் எழுந்த விமர்சனங்களுக்கு பின்னர் முதன் முறையாக பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வியாழனற்று இடம்பெற்ற ஐ.சி.சி. 2021 டி-20 உலகக் கிண்ண இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவிடம் ஐந்து விக்கெட்டுகளினால் தோற்றது.

ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட்டின் எளிதான பிடியெடுப்பை ஹசன் அலி தவறவிட்டார். பின்னர் மேத்யூ வேட் மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்களை விளாசி தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் பின்னர் பிடி நழுவல் மற்றும் அதனால் உண்டான இழப்புக்காக வேகப்பந்து வீச்சாளரான அலி, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானர்.

2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானின் பயணத்தின் நட்சத்திரமான அலி, அங்கு முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உருவெடுத்தார்.

இந் நிலையில் இது தொடர்பில் முதன்முறையாக வாய் திறந்துள்ள அலி, சனிக்கிழமை தனது டுவிட்டர் பதிவில்,

ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் தொடர்ந்தும் தனக்கான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

“எனது செயல்திறன் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை, ஆனால் நடந்த சம்பவத்தினால் என்னை விட நீங்கள் அனைவரும் வருத்தமடைந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன்.

என்னிடமிருக்கும் உங்கள் எதிர்பார்ப்புகளை மாற்ற வேண்டாம். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அதிகபட்சமாக சேவை செய்ய நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

அலியின் இந்த டுவிட்டர் பதிவுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான வாசிம் அக்ரம் மற்றும் பலரிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு | முதலமைச்சர் உத்தரவு

Next Post

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை! சம்பளத்தை அதிகரிக்க முடியாது: பசில் ராஜபக்ச

Next Post
தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை! சம்பளத்தை அதிகரிக்க முடியாது: பசில் ராஜபக்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures