Wednesday, May 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை | கிளிநொச்சி அரச அதிபர்

November 9, 2021
in News, Sri Lanka News
0
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை | கிளிநொச்சி அரச அதிபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளிற்கு நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார்.

இன்றைய தினமும் பாடசாலைகள் வழமைக்கு முன்னராக நிறைவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவிவ்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மாவட்டத்தில் 57 நபர்களைக்கொண்ட 27 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் ஒரு சில குடும்பங்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களிற்கான உடனடி உலருணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பெரிய மற்றம் சிறிய நீர்ப்பாசன குளங்களிற்கான நீர் வருகை குறைவாக தற்பொழுது காணப்படுகின்றது.

இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதியில் 60.3 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதுவரை குளங்களிற்கு கீழான பகுதிகளில் ஆபத்தான நிலை இதுவரை இல்லை.

பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் திறந்து விடுவதற்கான நடவடிக்கைகள் நீர்பாசன திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கனகாம்பிகைக்குளம் மற்றம் வன்னேரிக்குளம் ஆகியன வான்பாய்ந்து வருகின்றது. குறித்த பகுதியில் உள்ள மக்களிற்கு அனர்த்த முகாமைத்துவப்பிரிவு, பிரதேச செயலகம் மற்றும் நீர்பாசன திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது உள்ள காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்றைய தினம் பாடசாலைகள் நடைபெற்றபோதிலும் அவர்களை நேர காலத்தோடு வீடுகளிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெத்தோம்.

அதேவேளை நாளைய தினம் பாடசாலைகளை நிறுத்துமாறு நாங்கள் கேட்டிருக்கின்றோம். மேற்கொண்டு காலநிலையை அவதானித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவும் எண்ணியிருக்கின்றோம்.

பொதுவாக அனர்த்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினால் தொடர்ந்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினால் பிரதேச செயலகங்களில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

அனத்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக அண்மையில் பத்திரிகை செய்தியின் ஊடாகவும், தெரியப்படுத்தப்பட்டதான விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை உடன் மேற்கொள்ளப்பட்டது.

ஊற்றுப்புலம் கிராமத்தின் வள்ளுவர் பண்ணை கிராமம் போக்குவரத்து துண்டிக்கப்படுவது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு இரவு சீர்செய்யப்பட்டு இன்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

அவ்வாறு இடர் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது.

இரணைதீவு பகுதியில் இருக்கின்ற மக்களிற்கான விசேட ஏற்பாடுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக அங்குள்ள மக்கள் இவ்வாறான சூழல் ஏற்படுகின்றபொழுது அவர்களது உறவினர்கள் வீடுகளிற்கு வருவது வழக்கமானதொன்று.

அவர்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் கண்காணிப்பில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கௌதாரிமுனை பாடசாலைக்கு செல்வதற்கு காணப்படும் வீதி மிக மோசமான நிலையில்தான் காணப்படுகின்றது. அந்த வீதியையை ஓரளவு போக்குவரத்து செய்யக்கூடிய வகையில் அமைப்பதற்கான நடவடிக்கை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆயினும், பலத்த மழை காரணமாக அந்த வீதி செயலிழந்து காணப்படுகின்றது. அதனால் பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள், மக்கள் உள்ளிட்டோர் பாதிப்புறுகின்ற நிலைதான் காணப்படுகின்றது.

திருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு மழை இல்லாது இருக்கவேண்டும் என்பதுடன், அதற்கான சிறந்த திட்டமும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அதற்காக முயற்சித்து வருகின்றோம்.

அதேவேளை அண்மையில் ஆசிரியர்கள் செல்வதற்கு பிரதேச செயலகத்தினால் விசேட ஒழுங்குகளும் செய்யப்பட்டது.

அதற்கு மேலாக நிரந்தரமான நீர்வை ஏற்படுத்தவதற்கும் உத்தேசித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நேற்று நடந்த திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

Next Post

இலங்கை கிரிக்கெட் அணி பலம்வாய்ந்த சக்தியாகத் திகழும் | இயன் பிஷப்

Next Post
இலங்கை கிரிக்கெட் அணி பலம்வாய்ந்த சக்தியாகத் திகழும் | இயன் பிஷப்

இலங்கை கிரிக்கெட் அணி பலம்வாய்ந்த சக்தியாகத் திகழும் | இயன் பிஷப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் – சேரன் இணைந்து நடித்திருக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

May 14, 2025
களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 14, 2025
யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 13, 2025
குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

May 13, 2025

Recent News

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் – சேரன் இணைந்து நடித்திருக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

May 14, 2025
களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 14, 2025
யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 13, 2025
குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

May 13, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures