Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாணவர்களை பள்ளி சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சி

November 9, 2021
in News, Sri Lanka News
0
பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் பள்ளி ஒன்று மாணவர்களை ஈர்க்கும் நோக்கத்தில் ‘மகிழ்ச்சி’ பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளது. மாணவர்களுக்கு வீட்டுச் சூழலை வழங்கு வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இதுநாள் வரை படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என வீட்டிலேயே பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு பழகி விட்டதால் சட்டென்று அவர்களை பள்ளிச் சூழலுக்கு தயார்படுத்துவது சிரமமானது. அதனை கருத்தில் கொண்டே இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் இசை, நடனம், கலை வேலைப்பாடுகள் மற்றும் கைவினை, திரைப்பட விமர்சனங்கள், புகைப்பட விளக்கக்காட்சிகள், தோட்டக்கலை, புத்தக வாசிப்பு என பல விஷயங்கள் சொல்லித்தரப்படுகின்றன.

இந்த பாடத்திட்டம் பள்ளி நேரத்திற்கு அப்பால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்த பள்ளிக்கூடம் ஆலுவாவில் உள்ள கீழ்மாட் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. ‘‘எங்கள் பள்ளிக்கூடம் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக இயங்குகிறது. இங்கு படிப்பவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் விடுதியில் தங்கி படிக்கிறார்கள். கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால் நீண்ட நாட்களாக வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். மீண்டும் பள்ளிக்கு திரும்பும்போது வீட்டுச்சூழலை மறப்பது சற்று சிரமமானது. திடீரென்று குடும்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்டதைப்போல அவர்கள் உணருவதையும் நாங்கள் விரும்பவில்லை. மீண்டும் பள்ளி வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பழக்கப்படுத்தும் நோக்கத்தில் மகிழ்ச்சி பாடத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

மகிழ்ச்சி பாடத்திட்டங்களை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. அதனை பின்பற்றி இரண்டு வாரங்களுக்கு இந்த பாடத்திட்டத்தை நடத்த இருக்கிறோம். மாணவர்கள் மீண்டும் கற்றல் சூழலுக்குத் திரும்ப உதவுவதற்கான சிறந்த வழியாக மகிழ்ச்சி பாடத்திட்டமும் அமைந்திருக்கிறது’’ என்கிறார்கள், ஆசிரியர்கள்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஆளுமை தரும் ஆடவர் ஆடைகள் அணிவது எப்படி?

Next Post

நேற்று நடந்த திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

Next Post
நேற்று நடந்த திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

நேற்று நடந்த திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures