திருப்பதி கோவிலில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா முடிந்ததும் மறுநாள் பாக் சவாரி உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பாக் சவாரி உற்சவம் நடந்தது. அன்று மாலை 4 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
முன்னதாக திருமலையில் உள்ள நந்தவனத்தில் அனந்தாழ்வாரின் வம்சத்தினரும், அர்ச்சகர்களும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பாடினர். பாக் சவாரி நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]