Thursday, May 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

பற்களுக்கு வேர் சிகிச்சை

October 8, 2021
in Health, News
0
பற்களுக்கு வேர் சிகிச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடை பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும்.

முன்பெல்லாம் பல் சொத்தையாகிவிட்டால், ஒருவித சிமெண்டை கொண்டு சொத்தையை அடைப்பார்கள். அல்லது அந்த பல்லை நீக்கிவிடுவார்கள்.

இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து சிகிச்சை மாறும்.

எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘பில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது என்றும், சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் செய்து பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தை, சீழை அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிட்டு, நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த உடனேயோ அல்லது 15 நாட்கள் கழித்தோ பல்லைச் சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’, ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் கலந்த வேதிப்பொருளை கொண்டு நிரப்புகிறார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த பல்லுக்குக் `கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். பல்லுக்கு உறுதித்தன்மை கிடைத்துவிடும். சிலருக்கு ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்ய முடியாத அளவுக்கு பற்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை நீக்கித்தான் ஆக வேண்டும் எனவும் கூறுகிறார்கள்..

காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடை பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது. ஆரோக்கியமான பற்களுக்கு பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான ‘விரல் பல்துலக்கி’யைப் பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்கு பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும். குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாக துடைத்துவிட வேண்டும். தினமும் ஒரு கேரட், ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.

வைட்டமின்-சி, வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு போன்றவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச்சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது. வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றை தவிர்த்தால், பற்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

10 நிமிடத்தில் செய்யலாம் அவல் கேசரி

Next Post

சரும அழகுக்கு பப்பாளி.. தக்காளி.. ஆப்பிளை எப்படி பயன்படுத்தலாம்…

Next Post
சரும அழகுக்கு பப்பாளி.. தக்காளி.. ஆப்பிளை எப்படி பயன்படுத்தலாம்…

சரும அழகுக்கு பப்பாளி.. தக்காளி.. ஆப்பிளை எப்படி பயன்படுத்தலாம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சிரிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்!

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

May 15, 2025
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

May 15, 2025
ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

May 15, 2025
கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

May 15, 2025

Recent News

சிரிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்!

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

May 15, 2025
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

May 15, 2025
ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

May 15, 2025
கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

May 15, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures