செல்வராகவனின் மனைவியும் இயக்குனருமான கீதாஞ்சலி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கீதாஞ்சலி.
இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கீதாஞ்சலி செல்வராகவன் நேற்று தனது 35 வது பிறந்தநாளை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார். அந்தக் கொண்டாட்டத்தில், நடிகர் தனுஷ், செல்வராகவன், நடிகை வித்யூலேகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த புகைப்படங்களை கீதாஞ்சலி செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]